search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள் வெட்டு"

    • கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி தேவசுமதி. இவர்களுக்கு திருமணமாகி 17 வருடம் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தேவசுமதிக்கு முடித்தலை பகுதியைச் சேர்ந்த இளைய ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதாலாக மாறியது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தேவசுமதி 4 வருடங்கள் இளையராஜாவுடன் வசித்து வந்துள்ளார்.

    அவரை தேடி கண்டு பிடித்த கணவர், குழந்தை கள் வளர்ந்துவிட்டதால் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதை ஏற்று தேவசுமதியும் மீண்டும் வீட்டுக்கு வந்தார். ஆனால் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

    இதனை கணவர் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் தேவசுமதி செல்போனில் பேசி கொண்டிருந்தார். அவரிடமிருந்து செல்போனை கணவர் வாங்கினார். அப்போது போனில் பேசியது இளையராஜா என தெரியவந்தது.

    தனது மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறி கூறி அவரை கணவர் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள சர்ச்சின் அருகே ஜோசப் சென்று கொண்டிருந்த போது இளையராஜா அவரை வழிமறித்து அரிவா ளால் வெட்டியுள்ளார்.

    அதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் திரண்டதால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஜோசப் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளையராஜாவை தேடி வருகின்றனர்.

    • ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
    • ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மானத்தால் கிராமம் பரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது உறவினர்களு டன் சேர்ந்து அதே பகுதியில் புதிதாக முனியப்பன் கோவில் கட்டியுள்ளனர். நேற்று இந்த கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது கோவிலுக்கு சென்ற ரமேஷ் சாமியை மறைக்காதவாறு பணியை செய்யும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த கோவிந்தசாமி, அவரது மகனான ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரமேஷை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் தார மங்கலம் போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தசாமி (70), ஏட்டு முருகன் (45), சதீஷ் (30), சூர்யா(22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவ ராயனேந்தல் கிராம பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய அரசு புறம்போக்கு இடங்களை சுற்றி அடை யாள கற்களை நட்டு வைத்தனர். ேமலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை விரைவில் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பினர் போட்டிருந்த முள்வேலி களும் எரிக்கப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரையொருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கடுமையாக மோதிக் கொண்டனர்.

    இந்த மோதலில் பிரபா கரன் (வயது 56), இஸ்ரவேல் (45), பாக்கியராஜ் (44), சந்தன மாதா (40), சாம் தேவ குமார் (24), ஜான் செல்லையா (33) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர் பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலால் மணவராய னேந்தல் பகுதி யில் பெரும் பதட்டம் நீடித்து வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் 2பேர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் விக்கியை வெட்டினர்.
    • விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், அடுத்த மேட்டுக்குப்பம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற எமகா விக்கி ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

    நேற்று இரவு 10 மணி அளவில் அவர் வீட்டின் அருகே தனது உறவினர் ஹரிகிருஷ்ணன் நண்பர் மகாராஜன் ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் விக்கியை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்கி லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் மேலும் அங்கிருந்த ஹரிகிருஷ்ணன், மகாராஜன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.

    தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த விபின் கேபா அவனது கூட்டாளி அலார்ட் சின்னதம்பி ஆகிய இருவரையும் கைது செய்தனர். விக்கி மற்றும் சின்னதம்பி இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக சின்னத்தம்பி தனது கூட்டாளி விபின் கேபாவுடன் சேர்ந்து விக்கியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை வெட்டி கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே மது போதையில் இருந்து லாரி டிரைவரைஅரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • குடிபோதையில் லாரி டிரைவரின் மனைவிக்கு போன்செய்தபோது ஏற்பட்ட தகராறில் உடன் வந்த நண்பர் அரிவாளல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்த குமார் (34). கூலித்தொழிலாளி.

    இருவரும் நண்பர்கள் மணிகண்டன் மது பாட்டில் களை வாங்கிக் கொண்டு மது குடிப்பதற்காக குமார் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது 2 பேரும் மது அருந்தி விட்டு இருந்த நிலையில் குமார் மணிகண்டன் மனைவிக்கு போன் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனை மணிகண்டன் கண்டித்ததால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த குமார், மணிகண்டனை அரிவாளால் கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றார்.

    இதையடுத்து பலத்த காயமடைந் மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லம்கொ ண்டான் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலகாரம் தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார்.

    சம்பவத்தன்றும் அவர் வியாபாரத்திற்கு புறப்பட்டார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட ஜோதி(18) என்பவர் மாரியப்பனை மிரட்டி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார். இதனால் அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மணிகண்டஜோதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்தது. கை விரல்கள் துண்டாகின. வலியால் துடித்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர் பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டஜோதியை கைது செய்தனர். விசாரணையில், இவருக்கு சிறு வயதில் இருந்தே போதை பழக்கம் இருந்தது. இதனால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    • இரு குடும்பத்தினரிடையே நடைபெற்ற மோதலில் கரூர் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
    • போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி (54). இவரது மனைவி விஜயா (49). அதே பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (50).இவரது மனைவி ராதிகா (45). இரு குடும்பத்தினர் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஜயாவின் வீட்டிற்கு அருகே வந்த சிவசுப்பிரமணியம் என்பவர் விஜயாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த அறிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரது மனைவி ராதிகா, அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விஜயாவை தாக்கியுள்ளனர். இதில் விஜயா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயா, வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் விஜயாவை அரிவாளால்வெட்டி தாக்கியதாக ராதிகா, அவரது கணவர் சிவசுப்பிரமணியன், அவரது சித்தி தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அதேபோல் ராதிகா கொடுத்துள்ள புகாரில் தன்னை வினோத் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து வலது கை மேல் போட்டு காயப்படுத்தியதாகவும், சிந்து, விஜயா, ரவி ஆகியோர் தலை முடியை பிடித்து இழுத்து தன்னை தாக்கியதாகவும் கூறி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெட்டிய கும்பலில் ஒருவர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த ரவி என்று தகவல்
    • காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 21). டான்ஸ் மாஸ்டர்.

    இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரவணம்பட்டி போலீசார் கடந்த மாதம் 31-ந் தேதி நித்தீஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்த னர். கடந்த 9-ந் தேதி இவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று காலை நித்தீஷ்கு மார் அவரது நண்பர்களான ரத்தினபுரியை சேர்ந்த ரஞ்சித் (23), கார்த்திக் ஆகியோருடன் ஒரு மொபட்டில் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்து போடுவ தற்காக வந்தார்.

    கையெழுத்து போட்ட பின்னர் 3 பேரும் மொபட் டில் வீட்டிற்கு புறப்பட்டனர். மொபட் நஞ்சப்பா ரோடு அருகே சென்ற போது இவர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் தப்பிப்பதற்காக மொபட்டை ராம்நகருக்குள் திருப்பி சென்றனர்.

    ஆனால் அந்த கும்பல் 3 பேரையும் விடாமல் விரட்டி சென்ற னர்.மொபட் ராம்நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த கும்பல் மொபட்டை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கள் வைத்து இருந்த அரி வாளை எடுத்து நடு ரோட்டில் வைத்து நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டினர். கார்த்திக் தப்பிச் சென்றார். இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதனையடுத்து கும்பல் வெட்டுவதை நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் கிடைத்ததும் காட் டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் அங்குள்ள கடைகளில் பொருத்தப்ப ட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பல் டான்ஸ் மாஸ்டர் நித்தீஷ்கு மார், ரஞ்சித் ஆகியோரை வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் நித்தீஷ்குமார், ரஞ்சித் ஆகியோரை வெட்டி 8 பேரில் ஒருவர் கோவில்பா ளையத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்தால் மற்ற 7 பேரின் அடையாளமும் தெரிந்து விடும். இதனால் ரவியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள னர்.

    • நடத்தை சந்தேகத்தில் மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டினார்.
    • சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது.

    இதற்கிடையே கூலி வேலைக்கு சென்று வரும் அய்யாச்சாமி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சண்டை போட்டு தகராறிலும் ஈடுபட்டு வந் தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த மகாலட் சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித் துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதையறிந்த அய்யாச்சாமி நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை யாக மாலையில் தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அய்யாச்சாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சேத்தூர் புறக்காவல் நிலைய போலீ சார் வழக்குப்பதிவு செய்து அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான அய்யாச்சாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் நித்தீஷ்குமார் (வயது 22). இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாலியல் வழக்கு உள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் நித்தீஷ்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அவர் தினமும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி நித்தீஷ்குமார் இன்று காலை கையெழுத்து போடுவதற்காக, கோவை மகளிர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு ரஞ்சித், கார்த்திக் ஆகிய 2 பேர் பாதுகாவலாக வந்திருந்தனர்.

    கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் மீண்டும் காந்திபுரம் பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது ராம் நகர் தனியார் வங்கி முன்பாக, அவர்களை 2 மோட்டார் சைக்கிள்கள் வழிமறித்தன.

    வண்டியில் இருந்து பட்டாக்கத்தி, அரிவாளுடன் இறங்கிய 6 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட முயன்றது. எனவே அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தலைதெறிக்க தப்பி ஓடினர்.

    இருந்தபோதிலும் 6 பேர் கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் நித்தீஷ்குமார், ரஞ்சித்துக்கு படுகாயம் ஏற்பட்டது. கார்த்திக் சிறுகாயங்களுடன் தப்பினார். அதன்பிறகு அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நித்தீஷ், ரஞ்சித்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் ராம்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நித்தீஷ்குமார் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கெனவே பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவரால் பாதிக்கப்பட்டவர்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர்.
    • 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர். அங்கு மது குடித்து விட்டு நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 5 பேர் கும்பலுக்கும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்அடைந்த 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    சிகிச்சை

    பின்னர் இது குறித்து பொதுமக்கள் கிச்சிப்பா ளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரிவாள் வெட்டில் காயம்அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகி றார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×