search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For the temple priest"

    • ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
    • ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மானத்தால் கிராமம் பரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது உறவினர்களு டன் சேர்ந்து அதே பகுதியில் புதிதாக முனியப்பன் கோவில் கட்டியுள்ளனர். நேற்று இந்த கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது கோவிலுக்கு சென்ற ரமேஷ் சாமியை மறைக்காதவாறு பணியை செய்யும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த கோவிந்தசாமி, அவரது மகனான ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரமேஷை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் தார மங்கலம் போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தசாமி (70), ஏட்டு முருகன் (45), சதீஷ் (30), சூர்யா(22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×