search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "frontal"

    • இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
    • இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தத்தில் வசித்து வரும் ஞானமூர்த்தி (வயது 40). இவரது மனைவி மகேஸ்வரி (36). இவ்விருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். எலவனாசூர்கோட்டை அருகேயுள்ள கீரப்பாளையம் மேம்பாலத்தில் வந்தபோது, சென்னையில் இருந்து தாறுமாராக வந்த கார், டாக்டர்கள் வந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பலத்த காயமடைந்தார். மேலும், மருத்துவமனைக்கு சென்ற டாக்டர் தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றனர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், பலியான முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் பலியான முதியவர், திருச்செங்கோடு கைலாசபாளையத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (67) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திகேனுடன் (30) சென்னைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. மேலும், அதிகாலை நேரம் என்பதால் தூக்ககலக்கத்தில் டாக்டர்கள் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×