search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு
    X

    காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×