search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலவனாசூர்கோட்டை அருகே  திருச்செங்கோடு விவசாயி பரிதாப பலி:உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தம்பதி படுகாயம்
    X

    எலவனாசூர்கோட்டை அருகே திருச்செங்கோடு விவசாயி பரிதாப பலி:உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தம்பதி படுகாயம்

    • இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
    • இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தத்தில் வசித்து வரும் ஞானமூர்த்தி (வயது 40). இவரது மனைவி மகேஸ்வரி (36). இவ்விருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக பணிபுரிகின்றனர். இவர்கள் இன்று காலை 6 மணிக்கு தங்களுக்கு சொந்தமான காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர். எலவனாசூர்கோட்டை அருகேயுள்ள கீரப்பாளையம் மேம்பாலத்தில் வந்தபோது, சென்னையில் இருந்து தாறுமாராக வந்த கார், டாக்டர்கள் வந்த காரின் முன்பக்கத்தில் மோதியது. இதில் சென்னையில் இருந்து வந்த காரில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பலத்த காயமடைந்தார். மேலும், மருத்துவமனைக்கு சென்ற டாக்டர் தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றனர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், பலியான முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் பலியான முதியவர், திருச்செங்கோடு கைலாசபாளையத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (67) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்திகேனுடன் (30) சென்னைக்கு சென்று திரும்பியதும் தெரியவந்தது. மேலும், அதிகாலை நேரம் என்பதால் தூக்ககலக்கத்தில் டாக்டர்கள் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×