search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருகம்பாக்கத்தில் பரபரப்பு: ரவுடி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    விருகம்பாக்கத்தில் பரபரப்பு: ரவுடி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    • மர்ம நபர்கள் 2பேர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் விக்கியை வெட்டினர்.
    • விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், அடுத்த மேட்டுக்குப்பம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற எமகா விக்கி ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

    நேற்று இரவு 10 மணி அளவில் அவர் வீட்டின் அருகே தனது உறவினர் ஹரிகிருஷ்ணன் நண்பர் மகாராஜன் ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் விக்கியை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்கி லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் மேலும் அங்கிருந்த ஹரிகிருஷ்ணன், மகாராஜன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.

    தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தப்பி ஓடிய அதே பகுதியை சேர்ந்த விபின் கேபா அவனது கூட்டாளி அலார்ட் சின்னதம்பி ஆகிய இருவரையும் கைது செய்தனர். விக்கி மற்றும் சின்னதம்பி இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக சின்னத்தம்பி தனது கூட்டாளி விபின் கேபாவுடன் சேர்ந்து விக்கியை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரை வெட்டி கொல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    Next Story
    ×