search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதை தகராறில் 2 வாலிபர்களுக்கு  அரிவாள் வெட்டு
    X

    குடிபோதை தகராறில் 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

    • சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர்.
    • 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர். அங்கு மது குடித்து விட்டு நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 5 பேர் கும்பலுக்கும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்அடைந்த 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    சிகிச்சை

    பின்னர் இது குறித்து பொதுமக்கள் கிச்சிப்பா ளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரிவாள் வெட்டில் காயம்அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகி றார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×