search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

    • இருதரப்பினர் பயங்கர மோதல்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவ ராயனேந்தல் கிராம பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் நடத்திய அரசு புறம்போக்கு இடங்களை சுற்றி அடை யாள கற்களை நட்டு வைத்தனர். ேமலும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை விரைவில் அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு தரப்பினர் போட்டிருந்த முள்வேலி களும் எரிக்கப்பட்டது.

    இந்த பிரச்சினை தொடர்பாக சம்பவத்தன்று இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒருவரையொருவர் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கடுமையாக மோதிக் கொண்டனர்.

    இந்த மோதலில் பிரபா கரன் (வயது 56), இஸ்ரவேல் (45), பாக்கியராஜ் (44), சந்தன மாதா (40), சாம் தேவ குமார் (24), ஜான் செல்லையா (33) ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாய மடைந்த அவர்கள் திருச்சுழி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர் பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரு தரப்பினரி டையே ஏற்பட்ட மோதலால் மணவராய னேந்தல் பகுதி யில் பெரும் பதட்டம் நீடித்து வருவதால் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×