search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னதானம்"

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
    • வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.

    கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

    இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.

    ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
    • அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும்,

    அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும்.

    இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.
    • இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.

    தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர்.

    நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும்.

    மட்டுவார் குழலியம்மன் திருக்கோவில், தாயுமானவர் கோவில். உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது.

    மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.

    பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அதில் 9ம் நாள் அன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

    10ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்கு தான் தாயுமானவர் தெப்பம் என பெயர்.

    பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படி தான் விழா ஏற்பாடு செய்வார்கள்.

    இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    நான்காம் நாள் கைலாச பர்வதம், ஐந்தாம் நாள் வெள்ளை ரதம், ஆறாம் நாள் யானை வாகனம்,

    ஏழாம் நாள் நந்தி வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம்,

    பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.

    • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
    • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

    இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

    விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

    ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

    இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

    மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

    இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

    அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

    இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

    காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

    மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

    இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

    ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

    சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

    யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

    இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

    பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    • காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • விழாவில் அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து கொடுக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகியும், தொழில் அதிபருமான அய்யாத்துரைப் பாண்டியன் அன்னதானம் ஏற்பாடு செய்து அதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊத்துமலை இளைய ஜமீன் குமரேசராஜா, பழனிச்சாமி, பூலோகராஜ், சுபிக்ஷா கருப்பசாமி, பண்பொழி கவுன்சிலர் கணேசன், பேச்சிமுத்து ஆனந்த், செல்வராஜ் மற்றும் பால அருணாசலபுரம் தேவேந்திர குல வேளாளர் நாட்டாண்மைகள் மாதவன், மகேஷ் மற்றும் கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல்ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன், அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நாகர்கோவிலில் மீனாட் சிபுரம், வடிவீஸ்வ ரம், கோட்டார், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதேபோல் அகஸ்தீஸ்வ ரம், ராஜாக்கமங்கலம், மேல்புறம், குழித்துறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்க ளிலும் அதி காலையில் நடை திறக்கப் பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்தோடு வந்து பக்தர்கள் விநாயகரை வழி பட்டு சென்றனர்.

    விநாயகர் சதுர்த்தி யையொட்டி பொது இடங்களிலும், கோவில்களிலும், வீடுகளி லும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை பகுதியில் உள்ள கோவிலில் 9 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. விநாயகர் சிலைக்கு அருகம்புல், கொழுக்கட்டை, பழம், சுண்டல் படைத்து வழிபட்டனர்.

    பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கட் டது. இதேபோல் நாகர் கோவில் நகரில் வடசேரி, பள்ளிவிளை, வைத்தியநா தபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ½ அடி முதல் 9 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை 2 வேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்க ளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

    • தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
    • வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

    செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார்.

    இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

    இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.

    அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.

    ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

    சாலக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.

    தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

    • பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

    ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

    இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

    இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,

    ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,

    வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.

    சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

    வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.

    இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.

    பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

    மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.

    இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

    • அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.
    • வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

    அது வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் குறைவற்றது, வளர்வது எனப்பொருள். வைகாசி மாதம் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானங்கள் உதவிகள் ஆகிய அனைத்தும் அட்சயமாக வளர்ந்து பலனைத் தரும்.

    குறிப்பாக ஒரு சொம்பு அல்லது பாத்திரம் நிறைய தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    இதற்கு தர்ம கட தானம் எனப்பெயர்.

    புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்காகவும், பித்ருக்களின் திருப்திக்காகவும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை தானம் செய்கிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு ஒரு சொம்பு அல்லது பாத்திரத்தில் ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்களுடன் கூடிய சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதை ஏழைகளுக்கு தந்துவிட வேண்டும்.

    அட்சய திருதியை தினத்தன்று வீட்டின் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்தோ, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தோ, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தருவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.

    பசியுடன் கூடிய அனைவருக்கும் அன்னதானம், தண்ணீர் தானம் செய்ய வேண்டும்.

    இதில் ஜாதி, மத, இன, கல்வி, பாகுபாடு பார்க்கக் கூடாது.

    தாகத்தோடு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது புண்ணியத்தை தந்து, நமது விருப்பத்தை நிறைவேற்றும்.

    அது இறந்த முன்னோர்களுக்கு உண்டாகும் தாகத்தையும் தனித்து அவர்களுக்கும் நல்ல கதியை உண்டாக்கும்.

    மேலும் விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர் மோர் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.

    ஆகவே அட்சய திருதியை தினத்தன்று வெயிலில் தவிக்கும் 10 பேருக்காவது குடிக்க தண்ணீர் கொடுப்பதும்,

    காய்ந்து போன செடிகள், கொடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவதும் மிகவும் சிறந்தது.

    அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்ப்பணம் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானம் உதவி, ஆகிய ஆறும் அட்சயமாக பலனைத்தரும்.

    இதனால் கிடைக்கும் பலன் நமக்கும் நம்மைத் தொடர்ந்து நம் சந்ததிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் குறைவின்றி அட்சயமாக கிடைக்கும்.

    • முதுகுளத்தூர், மானாமதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் நாயக்கர் தெருவில் அமைந்துள்ள கண்ணன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் சுப்பையா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. கண்ணன். ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் செல்லையா, மணி, செந்தில் கண்ணன், சிவமுருகேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக கவுன்சிலர் சத்தியநாதன், கா.வினோத்குமார், முத்துமணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுந்தரபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் குழந்தை கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. கோவில் முன்பு நூற்றுக்கணக்கான குழந்தைகள் ராதை கிருஷ்ணன் வேடமிட்டு கோலாட்டம் ஆடினார்கள். ஸ்வாமி வேடத்தில் வந்த குழந்தைகள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சாஸ்தாநகர், அழகர் கோவில் தெரு, ெரயில்வே காலணி மற்றும் கொன்னக்குளம், வேதியேரேந்தல், செய்களத்தூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

    • பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை ராதா-ருக்மணி சமேத கிருஷ்ணா ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலய பத்தாம் ஆண்டு சுதர்சன ஹோம கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது

    முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.

    பின்பு கேரளாசெண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

    மத்தூர்,

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் வெற்றி கொண்டான் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×