search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் ஆய்வு"

    • திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர்.
    • அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    கடலூர்:

    திட்டக்குடியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.

    மேலும் இதில் டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாணவிகளை உடற்பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். விடுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது விடுதி காப்பாளர் செல்வரா ணி, வார்டு கவுன்சிலர் சுரேந்தர் உடனிருந்தனர்.

    • பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு பருவமழையின்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

    தற்போது தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 119.85 அடியாக உள்ளது. 613 கன அடி நீர் வருகிறது. அணையின் ஷட்டர் பகுதியில் இருந்து போர்பே டேம் சுரங்கப்பாதை மற்றும் அங்கிருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் வரை உள்ள பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.66 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை.

    பெரியாறு 1.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 2, சண்முகாநதி அணை 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
    • முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்

    • புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • இந்த பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கொடுமுடி அருகே வடுகனூரில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் போடப்பட்டிருந்த கான்கிரீட் கரைகள் உடைந்து சிதிலமடைந்தன.

    இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு புதிதாக கான்கிரீட் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பணிகளை நீர்வளத்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் சிவலிங்கம், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் மன்மதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை அதிகாரிகள் சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். அவர்களின் குறைகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் ஜெகதீஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மதுரை

    பருவ மழைக்கு முன்ன–தாக மதுரையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழை நீர் வடிகால் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை–களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் மதுரையில் தாழ்வான பகு–திகளில் அதிகளவில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ–டிக்கைகளை எடுப்பதற்காக மாநகராட்சி கமிஷனர் பிர–வீன்குமார் அதிகாரிக–ளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அந்த பகுதிளில் மழைநீரை தேக்கமின்றி வெளியேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.

    மதுரை ஆழ்வார்புரம், செல்லூர் சுயராஜபுரம், மீனாம்பாள்புரம், பந்தல்குடி கால்வாய், பி.பி.குளம், கீழ தோப்பு, தத்தனேரி, காந்தி நகர், தைக்கால் தெரு, ஓபுளா படித்துறை, கிருது மால் கால்வாய், அண்ணா தோப்பு பகுதி, பேச்சியம்மன் படித்துறை சாலை, சுங்கம் பள்ளிவாசல், இஸ்மாயில் புரம், தாமிரபரணி வீதி, ஆத்திகுளம் கண்மாய் மற் றும் வண்டியூர் ஆகிய 18 பகுதிகள் தாழ்வான இடங்க–ளாக கண்டறியப்பட்டுள் ளன.

    இந்த பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. மதுரையில் ஏற்கனவே கடந்த பல மாதங்களாக முல்லை பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

    ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அந்த சாலை–களில் சேறும் சகதியும் அதிக அளவில் குவிந்து வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து வருகிறது. மேலும் விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால் தந்தி நகர், திருப்பாலை, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் பொது–மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

    மேலும் பல மாதங்களா கியும் செல்லூர்-குலமங்க–லம் மெயின் ரோடு போடப்படாததால் வாகன ஓட்டிகள் படும் பாடு சொல்லி முடியாது. அது போல கூடல் நகர், ஆனை–யூர் பகுதிகளிலும் சாலைகள் படு மோசமாக காணப்படு–வதால் அடிக்கடி விபத்துக–ளும் நடந்து வருகின்றன.

    பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகு–திகளில் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை–களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு சாலை பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கிறார்கள். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மதுரை நகரில் உள்ள மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது
    • பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) செந்தில்குமார் அறிவுறுத்த லின்படி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஜோலார்பேட்டையில் உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    கடைகளில் லைெசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் கடைகளில் அதிக வர்ணம் கலந்த சிக்கன் மற்றும் சிக்கன் 65 இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.

    மேலும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    மளிகை கடைகளில் காலாவதியான பொரு ட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வணிக கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்ஸில் வைத்து விற்பனை செய்யவும், உணவுப் பொருட்களை சில்வர் கப், இலை போன்றவற்றில் விற்பனை செய்யவும், பேப்பர் மூலம் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மற்ற கடை உரிமையா ளர்களிடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
    • பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே உள்ளது. நாற்றங்கால் அமைத்து விவசாய பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மழை இல்லாததால் கவலையில் உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் குடிநீருக்காக 250 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 51.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 29 கன அடி நீர் வருகிறது. 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.73 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பருவமழை தொடங்கியதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மதுரை நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பேபி அணை, மெயின் அணை, ஷட்டர்கள் கேலரி பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
    • எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம்.

    நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது.

    எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

    • தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
    • விதிமுறையை மீறி கூவம் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    திருவள்ளூர்:

    கடம்பத்துார் ஒன்றியத்தில் கூவம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு கொண்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த ஏரி அருகே கண்ணுார் எல்லை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ள கடந்த 2022-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் விதிமுறையை மீறி கூவம் ஏரியில் மணல் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கூவம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் விதிமீறல் குறித்து நில அளவை செய்து வருகின்றனர்.

    ஆற்றூர் பேரூராட்சியில் சாலை பணி தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு
    கன்னியாகுமரி, மே.28-

    ஆற்றூர் பேரூராட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி நடைபெற்றது அதில் ரூ.16 லட்சத்தில் ஒரு வேலையும், ரூ.50 லட்சத்தில் ஒரு வேலையும் மொத்தம் 66 லட்சம் ரூபாயில் நடந்த வேலைகள் தரமற்றவை என அரசுக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது.

    அந்த வேலைகள் தொடர்பாக அதிகாரிகள் பல முறை ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில்  திருநெல்வேலி கோட்ட தரக் கட்டுப்பாடுப்பிரிவு கோட்டப் பொறியாளர் செல்வநம்பி, நாகர்கோவில் விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் ஆற்றூர் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பழைய பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்ட தகவல் வெளியே பரவியதும் ஆற்றூர் பேரூராட்சியில் முன்பு நடந்த பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் பரவியது.

    இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, 2018-ம் ஆண்டு பேரூராட்சியில் நடந்த சாலைப்பணியில் சரிவர செய்யாமல் முறைகேடு செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    அதன் ஒரு பகுதியாக இப்போது மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அந்த ஆய்வின் அறிக்கையை அரசுக்கு சமர்பிப்போம்” என்றனர். அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டதாக வெளியான தகவல் ஆற்றூரில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×