search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் ஆய்வு"

    • சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர்.
    • பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கிளை சிறை உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனரா? என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கிளை சிறை கண்காணிப்பாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் மெர்லின் ஜெயா , மாவட்ட நீதி குழும உறுப்பினர் மற்றும் சமூக பணியாளர் சக்திவேல், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுரேஷ் , சட்ட நன்னடத்தை அலுவலர் தயாளன் உடன் இருந்தனர். ஆய்வின் போது கைதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விபரங்கள் கேட்டறிந்தனர்.

    • வேதாரணியம் நகராட்சியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன
    • வணிக உரிமம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் வணிகம் உரிமம் குறித்து கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர் வேதாரணியம் நகராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த கடைகளில் நகராட்சியின் வணிக உரிமம் பெற்றுள்ளதா என நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் சுகாதார அலுவலர் ராஜாராமன் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகடையாக சோதனை நடத்தினர் உரிமம் பெறாத வணிகர்கள் புகைப்படம் குடும்ப அட்டை ஜிஎஸ்டி நம்பர் பான் கார்டு ஆதார் அட்டை சொத்து வரி வசதி விசிட்டிங் கார்டு உள்ளிட்ட 7 ஆவணங்களுடன் http://tnUrban epay th.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கமிஷனர் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு இந்த காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1200 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    காலை உணவு திட்டத்திற்கு மேற்கு ரத வீதி நேருஜி நினைவு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் உணவு கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 16 பள்ளிகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று காலை மாநகர நல அலுவலர் செபாஸ்டின் உணவு தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அட்டவ ணைப்படி அரிசி உப்புமா மற்றும் காய்கறியுடன் சாம்பார் தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனை சாப்பிட்டு ஆய்வு செய்தனர். மாணவ ர்களுக்கு வழங்கப்படும் உணவு, கவனமாகவும், தரமா னதாகவும் வழங்க வேண்டும். தொடர் மழை பெய்து வருவதால் சமையல் கூடத்தை எப்போதும் தூய்மை வைத்துக் கொள்ள அறிவுறுத்தினர்.

    • கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.
    • கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா என்றும் பார்வையிட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

    மணவாளக்குறிச்சி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி, இனிப்பகங்கள் மட்டு மின்றி சிலர் வீடுகள், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக பலகா ரங்கள் தயாரிப்பு தொழி லில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்களில் தரமான பலகாரங்கள் தயாரிக்கப் படுகிறதா? என்று ஆய்வு செய்ய மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர விட்டார்.

    அதன்பேரில் தமிழகம் முழுவதும் உணவு பாது காப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாது காப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு குளச்சல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி பகுதிகளில் 12 பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 2 கடைகளில் ரூ.1250 மதிப்புள்ள காலவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னர் உரிமையாளருக்கு எச்ச ரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    • அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது.
    • விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை வாயிலாக திருப்பூர் ,கரூர் மாவட்டத்தில் 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழி ஓரத்தில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    அமராவதி அணையில் துவங்கி கரூர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றுடன் அமராவதி ஆறு இணைகிறது. திருப்பூர் ,கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக 148 கி.மீ தூரம் பயணிக்கும் அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் நூற்றுக்கணக்கான மின் மற்றும் ஆயில் மோட்டார் வைத்து சட்ட விரோதமாக நீர் எடுக்கப்படுகிறது.விவசாயத்திற்கு மட்டுமின்றி தென்னைநார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் நீர் எடுக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் ஆற்றுக்குள்ளேயே குழி தோண்டி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பாசனம் மற்றும் குடிநீருக்கு திறக்கப்படும் நீர் பெரும் அளவு திருடப்படுவதால் பாசன நிலங்களில் வறட்சியும், அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களை அகற்ற வேண்டும் என விவசாயிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றவும் முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உடுமலை ,மடத்துக்குளம் ,தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட வழியோரத்தில் ஆற்றின் இரு புறமும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள மோட்டார்கள்,பைப் கட்டுமானங்களை அகற்றி பறிமுதல் செய்யப்படுவதோடு போலீசில் புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆற்றின் கரையில் கிணறுகள் அமைத்தும் மோட்டார்கள் அமைத்தும் நீர் ஊறிஞ்சபடுவது கண்டறியப்பட்டால் விவசாய மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப் பணிகளும் நடந்து வருகிறது. ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது
    • 1800 குடும்பங்கள் பயனடைந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    வேளாண்மைத்துறை சார்பாக இந்த ஆண்டு மாகாணிப்பட்டு, சிறுவளையம், பெறுவளையம், சங்கரன் பாடி, சிறுகரும்பூர் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குறு சிறு மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்பட்டது.

    நடவு மேற்கொள்ளப்பட்ட தென்னங்கன்றுகளை சென்னை வேளாண்மை ஆணையரக துணை இயக்குநர் ஸ்ரீவித்யா நேற்றுமுன்தினம் சிறுவளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமாபுரம், பள்ளிப்பட்டறை மற்றும் பெருவளையம் ஊராட்சிக்கு உட்பட்ட களப்பலாம்பட்டு ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இத்தரிசு நில தொகுப்பில் வரப்போரம் வேளாண்மை துறையினரால் நடப்பட்ட தேக்கு, மகாகனி முருங்கை மற்றும் அகத்தி மர கன்றுகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சண்முகம், மாவட்ட வேளாண்மை அலுவலர் (மாநில திட்டம்) வினோத் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஆகாஷ் உடன் இருந்தனர்.

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங் களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு :

    வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறிக்கடை, உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே உள்ள மீன் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது பழைய மீன்கள், கோழிக்கறி ஆகியவை மசாலா தடவி இரவு நேர விற்பனைக்கு குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருப்பதை உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கண்டறிந்தார்.

    இது போன்ற காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து 3.5 கிலோ மீன், கோழிக்கறி ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • பள்ளிக்கூடத்தில் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
    • பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

    பாப்பாரப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 126 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் கழிவறைகளுக்கு தண்ணீர் வழங்க கழிவறை வளாகத்தின் மேல் 2 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று ஊபள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா?: அதிகாரிகள் ஆய்வுராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது பள்ளிக்கூடத்தில் உள்ள தொட்டிகளுக்கும் தண்ணீர் ஏற்றப்பட்டது. இதையடுத்து பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் கழிவறை மேல் உள்ள தொட்டியில் ஏறி தண்ணீர் முழுவதும் நிரம்பி விட்டதா? என பார்த்தபோது நீர் கலங்கலாக இருந்தது. துர்நாற்றமும் வீசியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் பாபுவிடம் தெரிவித்தார். பின்னர் தலைமை ஆசிரியர் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கல்பனாவிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பென்னாகரம் தாசில்தார் சவுகத் அலி, பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகாலட்சுமி, பென்னாகரம் உதவி கல்வி அதிகாரி துளசிராமன் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் (ஆர்.ஓ.) பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து தடயவியல் நிபுணர் தீபா தண்ணீர் மாதிரியை எடுத்தார். இதையடுத்து அதிகாரிகள் நீரை பரிசோதனைக்காக தர்மபுரிக்கு எடுத்து சென்றனர். அங்கு நீரை பரிசோதனை செய்த பின்னரே தண்ணீரில் மனித கழிவு கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகே ஆற்றாங்கரை ஊராட்சியில் வைகை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை காலத்தில் காற்றின் திசை, வேகம் மாறுபாட்டால் ஆற்றுக்கும், கடலுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து மணல் மூடிவிடும்.

    கடலுக்கும், ஆற்றுக்கும் தொடர்பு துண்டிக்கப்படும் போது ஆற்றுப்பகுதிக்கு படகுகளை கொண்டு செல்ல முடியாமல் கடல் பகுதியில் நிறுத்த நேரிடும். அதனால் கடலில் வீசும் காற்றில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடை கின்றன. அதனால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    அதைத் தொடர்ந்து வைகை ஆற்றை துார்வார அப்பகுதி மீனவர்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நேற்று மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ஆய்வாளர் காளீஸ்வரன், பொறியாளர் மணிவண் ணன் ஆகியோர் ஆற் றங்கரை முகத்துவார பகுதியை பார்வையிட்டனர்.

    ஆற்றை தூர் வாருவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து மீன்வளத்துறை உயர் அதி காரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு முழுமையாக ஒப்புதல் வழங்கிய பின் துார் வாரும் பணிகள் நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.

    • நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் உள்ளது
    • போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வேப்ப மூடு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் செல்பி பாயிண்ட் அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். பூங்காவிற்குள் பாகிஸ்தான் போரில் கடந்த 1971-ம் ஆண்டு ஈடுபட்ட மேக் 21 ரக போர் விமானம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த போர் விமானமானது கடந்த 2014-ம் ஆண்டு விமானப் படையால் வழங்கப்பட்டது.

    தற்பொழுது இந்த விமானம் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக திருவனந்தபுரம் விமா னப்படை தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பிஜு, அபினவ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாநக ராட்சி அலுவல கத்திற்கு வந்தனர். மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிர மணியனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் வைக்கப் பட்டுள்ள விமானத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:-

    போர் விமானத்தை நல்ல நிலையில் மாநகராட்சி பராமரித்து வருகிறது. போர் விமானத்தில் பொதுமக்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற போர் விமானத்தில் பெயர்களை எழுதாமல் இருக்க எச்சரிக்கை பலகை மாநகராட்சி சார்பில் வைக்க வேண்டும். விமானத்தின் உற்பத்தி, அது என்ன என்ன சேவை செய்துள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் எழுதி அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.

    விமானத்தின் இரு புறங்களில் உள்ள மரக்கி ளைகளை அகற்ற வேண்டும். இதனால் விமானத்தின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுவதை தவிர்க்கலாம். மேலும் போர் விமானம் நல்ல நிலையத்தில் உள்ளதால் அந்த விமானத்திற்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத் திற்கு உட்பட்ட 2021-22-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தருமபுரி - அரூர் இடையே இருவழி சாலை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்கு நர் கோதண்டராமன் சாலை யின் நீளம், அகலம், கனம், சரிவு மட்டம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம், சேலம் நெடுஞ்சா லைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் வத்சலா வித்யானந்தி, தருமபுரி நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜி, உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உடன் உடனிருந்தனர்.

    ×