என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "inspection by officials"
- திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.
அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன.
- யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு - தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.
இதனால் யானைகள் அவ்வழியாக செல்லாமல் ஆபத்தான முறையில் வழுக்கி கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலானது. இைதயடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் யானை சறுக்கி சென்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த இடத்தில் கான்கிரீட் பாதையை அகற்றி யானைகள் எளிதில் சென்று வர ஏதுவாக புல்தரை அமைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக மீண்டும் வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கே.என்.ஆர் பகுதியில் இருந்து பர்லியாறு வரை யானைகள் கடந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர்.
இதுகுறி த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.பின்னர் யானைகள் பாதுகாப்பாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
