search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணி
    X

    சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சுழி அருகே நரிக்குடி-மானூர் இடையே சாலை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி-மானூர் இடையே யான 3 கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இங்கு புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து முதல்-அமைச்சரின் 2022-23 கிராமச்சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 44 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

    அதனடிப்படையில் தற்போது நரிக்குடி - மானூர் இடையிலான சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்கும் பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடைய உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற் பொறி யாளர் கார்த்திக் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த தார் சாலை பணி விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் பிரபா, சாலை ஆய்வாளர் சுரேஷ், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்ணன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×