search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி கோவில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
    X

    திருத்தணி கோவில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

    • தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.

    திருத்தணி:

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக சுவாமிநாதன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆர்.டி.ஓ.ஹஸ்ரத்பேகம், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் வெண்ணிலா, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு, சுகாதாரத்துறை, மின்சார துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் தங்க கோபுரம், கோவிலில் உள்ள அறைகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜெனரேட்டர் அறை, கோவிலில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், மலை மேல் உள்ள கடைகள், கோவில் தங்கத்தேர், வெள்ளி தேர் உள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    Next Story
    ×