search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruthani Temple"

    • தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர்.

    திருத்தணி:

    தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழக காவல்துறையில் தனி பாதுகாப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக சுவாமிநாதன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்ட் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் வந்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மண்டபத்தில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், வருவாய் ஆர்.டி.ஓ.ஹஸ்ரத்பேகம், முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, தாசில்தார் வெண்ணிலா, இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தலைமை மருத்துவர் லட்சுமி நரசிம்மன், தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு, சுகாதாரத்துறை, மின்சார துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவிலின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கோவில் தங்க கோபுரம், கோவிலில் உள்ள அறைகள், கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், ஜெனரேட்டர் அறை, கோவிலில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள், மலை மேல் உள்ள கடைகள், கோவில் தங்கத்தேர், வெள்ளி தேர் உள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    • திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது.
    • கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் மலைக்கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில், கோவில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த 41 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரம், தங்கம் 708 கிராமும், வெள்ளி 19 கிலோ 750 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. வழக்கமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.150 சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் பிரசித்திபெற்றது. இங்கு தினந்தோறும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் பக்தர்கள் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.வாரத்தில் செவ்வாய்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் செவ்வாய்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்ய திருத்தணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. வழக்கமாக இலவச தரிசனம் மற்றும் ரூ.150 சிறப்பு கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இன்று காலை கூட்டம் அதிகமாக இருந்தால் ரூ.150 சிறப்பு கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிப்பது திடீரென நிறுத்தப்பட்டது. சிறப்பு கட்டண டிக்கெட் வழங்கப்பட்டதால் பக்தர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அவர்கள் அங்கிருந்து கோவில் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன் கோவிலுக்கு வந்து இருந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறப்பு கட்டணம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்தற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×