search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dengue cases"

    • டெங்கு காய்ச்சல் பாதிப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.
    • கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    மதுரை

    உலக அளவிலும் இந்திய அளவிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுகாதாரத் துறையும் ஊரக உள்ளாட்சித் துறையும் இணைந்து வீடு வீடாக சென்று தேங்கி இருக்கும் நீரை அகற்றுவது தொடர் பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நல்ல நீரில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் வீடு மற்றும் அருகில் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் குடிநீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும் எனவும், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும், அவர் கள் அறிவுறுத்தி வருகின்ற னர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் செய்து கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வேண்டும் எனவும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை தரக்கூடாது என மருந்து கடைகளுக்கும் அறிவுரை தரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மதுரை யில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக் கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டில் 25 குழந்தை களுக்கான படுக்கைகள், 44 பெரியவர்களுக்கான படுக்கைகள், ஐ.சி.யூ. பிரிவில் பெரியவர்களுக்கு 20 படுக்கைகள், குழந்தை களுக்கு 15 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக இந்த வார்டில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிப்ட் முறையில் செயல்படும் சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று ஒரு நாளில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள் ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் முழு வதிலும் 70-க்கும் மேற்பட் டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்ற னர். மாவட்ட அளவில் இன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்வ தற்காக ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்ப பட்டுள்ளது. இதற்கிடையே நகர், கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் பகுதிகளில், மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நகர் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காரைக்கால் ராம்நகர், நேரு நகர் விரிவாக்கத்தில் இருவருக்கு நேற்று டெங்கு நோய் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதர ஆய்வாளர் சிவவடிவேல், சுகாதார உதவியாளர் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, டெங்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து, அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறை, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, அப்பகுதி முழுவதும், கொசுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் பொதுமக்களிடம் பேசியதாவது:-மழை காலங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்க கூடும். அவற்றில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு கொசு உற்பத்தியை பெருக்கும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த மழைக்கால, பேரிடர் காலங்களில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால், மருந்துகளை உட்கொள்ளா மல், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்றார்.

    ×