search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றூர் பேருராட்சி அலுவலகம்
    X
    ஆற்றூர் பேருராட்சி அலுவலகம்

    ஆற்றூர் பேரூராட்சியில் சாலை பணி தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு

    ஆற்றூர் பேரூராட்சியில் சாலை பணி தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு
    கன்னியாகுமரி, மே.28-

    ஆற்றூர் பேரூராட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காவின் குளம் கான்கிரீட் சாலை பணி நடைபெற்றது அதில் ரூ.16 லட்சத்தில் ஒரு வேலையும், ரூ.50 லட்சத்தில் ஒரு வேலையும் மொத்தம் 66 லட்சம் ரூபாயில் நடந்த வேலைகள் தரமற்றவை என அரசுக்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது.

    அந்த வேலைகள் தொடர்பாக அதிகாரிகள் பல முறை ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில்  திருநெல்வேலி கோட்ட தரக் கட்டுப்பாடுப்பிரிவு கோட்டப் பொறியாளர் செல்வநம்பி, நாகர்கோவில் விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் ஆற்றூர் பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பழைய பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்ட தகவல் வெளியே பரவியதும் ஆற்றூர் பேரூராட்சியில் முன்பு நடந்த பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக தகவல் பரவியது.

    இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, 2018-ம் ஆண்டு பேரூராட்சியில் நடந்த சாலைப்பணியில் சரிவர செய்யாமல் முறைகேடு செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    அதன் ஒரு பகுதியாக இப்போது மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அந்த ஆய்வின் அறிக்கையை அரசுக்கு சமர்பிப்போம்” என்றனர். அதிகாரிகள் ஆய்வு  மேற்கொண்டதாக வெளியான தகவல் ஆற்றூரில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×