என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அகதிகள்"
- கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.
மதுரை
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
- ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக சென்று புதிய அடையாளங்களை உருவாக்கி வசித்து வருகின்றன.
இந்நிலையில், இதுபோல் ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
இதையடுத்து நர்வல் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை கைது செய்தனர்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
- 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.
இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
- ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
- முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை அகதிகளுக்கான குடியிரு ப்புக்கள் கட்ட ப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜெசிந்தா லாசரஸ் , கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் வாழ் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கும் வகை யில் அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய
6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவ னங்களின் பங்களிப்புடன் ஆய்வு செய்து, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் என ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உள்பட பலர் உடனிருந்தனர்.
- இலங்கை அகதிகள் முகாமில் 2 பேருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
- இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ரூபன்(37). இவரது அண்ணன் மிஸ்ரோய்(42). ரூபன் மனைவி செல்வி. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் செல்வியின் சித்தப்பா மகன் தமிழ்ச்செல்வன் தன்னுடைய அக்காவை பிரிந்து வாழ்வதால் ரூபனிடம் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று ரூபன் இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வன் குடிபோதையில் தகராறு செய்து ரூபனை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்.
தடுக்க வந்த அண்ணன் மிஸ்ரோயையும் பாட்டிலால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே ஓடிவிட்டார். காயம் அடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
- ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.
- ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏதென்ஸ்:
துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 108 பேர் மீட்கப்பட்டதாக ஐநா அகதிகள் அமைப்பு கூறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்