search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife suicide"

    கபிஸ்தலம் அருகே கணவர் பேசாததால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவங்குடி அண்ணாமலை நகரில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27) இவர்களுக்கு திருமணமாகி 6 வருடமாகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பேசவில்லை. கணவர் பேசாததால் மனமுடைந்த கலைச்செல்வி வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கலைச்செல்வியின் தந்தை காசிநாதன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தன் மகள் இறந்ததில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார் அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கலைச்செல்விக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தாரா? எனவும் தஞ்சாவூர் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

    தஞ்சையில் கணவர் குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார் ரோடு மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அய்யப்பன் தினமும் மது குடித்துவிட்டு வந்து ஜெயஸ்ரீயிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் மது குடித்துவிட்டு வந்துள்ளார். இதை ஜெயஸ்ரீ கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெயஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் ஜெயஸ்ரீ உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயஸ்ரீக்கு திருமணம் முடிந்து 5 வருடம் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.

    கள்ளக்காதலினால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கீழ் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கணவனை விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #Highcourt #IllegalAffair
    சென்னை:

    சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தது. இதை சங்கீதா கடுமையாக எதிர்த்தார். இதை மாணிக்கம் கேட்காததால், தன்னுடைய 18 மாத பெண் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டார்.



    இதுகுறித்து மாணிக்கம் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் கோர்ட்டு, தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமை குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணிக்கம் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வழக்கில் மாணிக்கம் மீது வரதட்சணை கேட்டு மனைவி சங்கீதாவை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை சங்கீதாவின் தாயார் மட்டுமே சுமத்தியுள்ளார். மற்ற சாட்சிகள் இதற்கு ஆதாரமாக எந்த ஒரு வாக்குமூலத்தையும் கொடுக்கவில்லை.

    இந்த வழக்கில் வட்டார வருவாய் அலுவலரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில் கூட, மனுதாரர் வரதட்சணை கொடுமை செய்யவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல பிற சாட்சிகள் வரதட்சணை கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை. அதனால் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அடுத்தப்படியாக தற்கொலைக்கு தூண்டினார் என்ற குற்றச்சாட்டு மனுதாரர் மீது உள்ளது.

    கள்ளக்காதல் விவகாரத்தில், தன்னுடைய மனைவியை ஆத்திரமூட்டி, அவரை தற்கொலை செய்ய வைத்தார் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை. அந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு உருப்படியான ஆதாரங்களையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை. சமீபத்தில் பிரகாஷ்பாபு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தால், மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் கணவனை தண்டிக்க முடியாது. அதேநேரம், இந்த கள்ளக்காதல் விவகாரத்தினை சுட்டிக்காட்டி, விவாகரத்து பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறி உள்ளது

    மனுதாரர் 2008-ம் ஆண்டே ஜாமீனில் வெளியில் வந்து, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு, 3 குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, கள்ளக்காதலினால் மனைவியை தற்கொலைக்கு மனுதாரர் தூண்டினார் என்று மாணிக்கத்தை தண்டிக்க முடியாது. அதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். கீழ் கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  #Highcourt #IllegalAffair


    சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கள்ளத்தொடர்பை கணவன் நியாயப்படுத்தியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AdulteryVerdict #ExtramaritalAffair
    சென்னை:

    அட, பாவி மனுஷா... உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..!

    எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாதிரி ஒரு பெண் தானே!

    ஏன் கத்துறே? ஊரு உலகத்துல நடக்காத தப்பையா செய்து விட்டேன்? போ... போய் வேலையை பார்...!

    ஆமய்யா... ஏன் சொல்ல மாட்டே? நீயே கதின்னு உல் காலடியில் கிடக்கிறேன் பார்! நீ இதுவும் செய்வே! இதுக்கு மேலேயும் செய்வே! உன்னை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டாய்! போலீசுல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டினால் அவ வீட்டுக்கு போக மாட்டாய்...! இப்ப பாரு!

    அடியேய்.... எங்க... போலீசுக்கா? சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட ஒண்ணும் செய்ய முடியாதுடி! உள்ளதை சாப்பிட்டு கிட்டு ஒழுங்கா இரு....!

    - இது கற்பனையில் எழுதப்பட்ட வசனம் அல்ல. நிஜமாகவே சென்னை நெசப்பாக்கம் பாரதி நகரில் நடந்தது.

    ஜான்பால் பிராங்கிளின் (26) அந்த பகுதியில் பூங்கா காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா (24).

    இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு வயதில் குழந்தையும் உள்ளது.

    நல்ல காதல் பூர்த்தி ஆனதும் கள்ளக்காதலுக்கு பிராங்கிளின் வலைவீச வலையில் சிக்கி இருக்கிறார் அதே பூங்காவில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த பெண்.

    கள்ளக்காதலியே தஞ்சம் என்று அந்த பெண் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே புஷ்பலதா கண்காணிக்க தொடங்கி இருக்கிறார்.

    அப்போது கணவரின் கள்ளத்தொடர்பை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் கணவரிடம் கேட்க முடியாமல் தவித்து இருக்கிறார்.

    மனக்குமுறல் எப்படியாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும். நேற்று முன்தினம் மதியமே பிராங்கிளினுக்கு பணி முடிந்து விட்டது. ஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவில்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.

    கள்ளக்காதலியுடன் உறவாடி விட்டு வந்திருப்பதை அறிந்ததும் புஷ்பலதா ஆத்திரத்தில் பொங்கி எழுந்திருக்கிறார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம்தான் மேலே குறிப்பிட்டு இருப்பது.

    வாக்குவாதம் முடிந்ததும் கோபத்தில் பிராங்கிளின் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்.

    அவரது கோபத்தை கள்ளக்காதலியின் மோகம் கட்டுப்படுத்தி இருக்கும். ஆனால் எந்த தவறும் செய்யாத புஷ்பலதாவின் ஆத்திரத்தை எது கட்டுப்படுத்தும்?

    கணவரிடமும் நியாயம் கிடைக்காது. கோர்ட்டுக்கு போனால் கூட நீதி கிடைக்காது என்றதும் புஷ்பலதாவுக்கு வாழ்க்கை வெறுத்தது. மின் விசிறியில் தூக்கு போட்டு தன் உயிரையே முடித்துக் கொண்டார்.

    வீடு திரும்பிய பிராங்கிளின் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் மனைவியை தேடி இருக்கிறார். வெற்றுடலாய் மின் விசிறியில் புஷ்பலதா தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தான் நடந்த விபரங்களை பிராங்கிளின் தெரிவித்து இருக்கிறார்.


    தகாத உறவும் சரிதான் என்ற சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதற்கு முதல் பலியாகி இருக்கிறார் புஷ்பலதா.

    சட்டம் வேறு! நடைமுறை வாழ்க்கை வேறு! நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வரலாம். சட்டத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை மாற்ற இயலுமா?

    பிராங்கிளினும் விரும்பினார். கள்ளக்காதலியும் விரும்பினார். இருவரது சம்மதத்துடன் தகாத உறவும் நல்ல உறவாகி விட்டது.

    அதற்காக புஷ்பலதாவும் ‘நீயும், நானும்’ என்பதுதான் நமது சட்டம். நீ ஒருத்தியை தேடிச் சென்றிருக்கிறாய். நானும் ஒருவனை தேடிக் கொள்கிறேன் என்று செல்வாரா? அவர் இந்த மண்ணின் கலாச்சாரத்தின் நடமாடும் அடையாளம் அல்லவா? தனக்கொரு கேடு என்றால் தன்னைத்தான் அழித்துக் கொள்வாள். அதைத்தான் செய்து இருக்கிறார்.

    சரி, இனி புஷ்பலதாவின் சாவுக்கு காரணமாகி விட்டார் என்ற சட்டப்பிரிவின் மூலம் பிராங்கிளின் தண்டனைக்கு உள்ளாகலாம்.

    எந்த தவறும் செய்யாத அவர்களது குழந்தையும் தண்டிக்கப்பட்டுள்ளதே! அதற்கு யார் பதில் சொல்வது?

    யோசிக்காமல் எடுக்கும் எந்த முடிவும் மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகி விடலாம். பாண்டிய மன்னன் எடுத்த தவறான முடிவு மதுரையின் அழிவுக்கு வழி வகுத்ததல்லவா! #AdulteryVerdict #ExtramaritalAffair
    தேனி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தவமணி (வயது38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்து விட்டார். அன்று முதல் தவமணி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். கணவர் இல்லாத உலகத்தில் தானும் இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொள்வது என தீர்மானித்தார்.

    வீட்டிலேயே வி‌ஷத்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கணவர் 2-வது திருமணம் செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி சுந்தர்நகரை சேர்ந்தவர் அபிராமி (வயது26). இவருக்கும் அவரது உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு 2 பேரும் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்து பெற்றனர்.

    தற்போது மணிகண்டன் 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அபிராமி வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி அருகே குழந்தைகளை கணவன் பிரித்து அழைத்து சென்றதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மல்லிகா (வயது 38). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மல்லிகாவுக்கு ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு விருமாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மல்லிகா விருமாண்டியை விவாகரத்து செய்து பின்பு குணசேகரனை திருமணம் செய்து கொண்டார். இதனால் மல்லிகாவின் தாய் குழந்தைகளை விருமாண்டியிடம் விட்டு விட்டு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சிடைந்த மல்லிகா குழந்தைகளை பார்க்க அழைத்து செல்லுமாறு தாயிடம் கூறினார்.

    ஆனால் அவரது தாய் குழந்தைகளை பார்க்க அழைத்து செல்ல மறுத்து விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தம பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டையில் கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கற்பகநாதர் குளம் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவரது மனைவி கலைராணி (வயது 37).

    உத்தராபதி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் மகள் சடங்கு நிகழ்ச்சிக்கு உத்தராபதியும், கலைராணியும் சென்றனர். அப்போது அவர்களுகிடையே மீண்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கலைராணி தங்களது வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை திருவாரூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கலைராணியின் உறவினர் அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவன் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் மேகலா (வயது 25). 3 மகன்கள் உள்ளனர்.

    அண்ணாமலைக்கு அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி மேகலா கண்டித்துள்ளார். இப்படி குடித்து விட்டு ஏன் வீட்டுக்கு வருகிறீர்கள்? எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த மேகலா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாகூரில் குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் பங்களா வீதி பகுதியை சேர்ந்தவர் வினோத், பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (வயது 25). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு புத்திரன் (6), ரட்சன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசி மேலும் குழந்தை வேண்டாம் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார். இதனால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையில் வினோத் 15 நாள் சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பினார்.

    தமிழரசி என்னையும், குழந்தைகளையும் கவனிக்காமல் சுற்றுலா சென்று விட்டீர்களே? என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வினோத் வேலைக்கு சென்று விட்டு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது தமிழரசி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    வினோத் கதவை உடைத்து மனைவியை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வில்லியனூர் மாவட்ட கலெக்டர் உதயகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது. #tamilnews
    ரெயின்போ நகரில் மின்துறை ஊழியர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி. இவர் புதுவை மின்துறையில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கலைச்செல்வியை பார்பதற்காக அவரது அண்ணன் சண்முகம் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சண்முகம் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கலைச்செல்வி மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து கலைச்செல்வியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைச்செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மனநிலை பாதிப்பால் கலைச்செல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ×