என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband drunk"

    கணவரின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமம் மேலபாண்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடித்துவிட்டு வந்ததை தமிழ்செல்வி கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த தமிழ்ச்செல்வி மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாராம். உடன் தமிழ்ச்செல்வியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திலாஸ்பேட்டையில் கணவரின் குடிபழக்கத்தால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதற்கிடையே ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    அது போல் நேற்று மாலை ரவி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வழக்கம் போல் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரவி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ரவி வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ரவி ஜன்னல் வழியாக பார்த்த போது மின் விசிறியில் சேலையால் வள்ளி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து வள்ளியை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கணவன் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் மேகலா (வயது 25). 3 மகன்கள் உள்ளனர்.

    அண்ணாமலைக்கு அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி மேகலா கண்டித்துள்ளார். இப்படி குடித்து விட்டு ஏன் வீட்டுக்கு வருகிறீர்கள்? எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த மேகலா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×