search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death husband"

    தேனி அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தவமணி (வயது38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் இறந்து விட்டார். அன்று முதல் தவமணி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தார். கணவர் இல்லாத உலகத்தில் தானும் இருக்க கூடாது என்று தற்கொலை செய்து கொள்வது என தீர்மானித்தார்.

    வீட்டிலேயே வி‌ஷத்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×