என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே குழந்தைகளை கணவன் பிரித்ததால் மனைவி தற்கொலை
தேனி:
உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மல்லிகா (வயது 38). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மல்லிகாவுக்கு ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு விருமாண்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மல்லிகா விருமாண்டியை விவாகரத்து செய்து பின்பு குணசேகரனை திருமணம் செய்து கொண்டார். இதனால் மல்லிகாவின் தாய் குழந்தைகளை விருமாண்டியிடம் விட்டு விட்டு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சிடைந்த மல்லிகா குழந்தைகளை பார்க்க அழைத்து செல்லுமாறு தாயிடம் கூறினார்.
ஆனால் அவரது தாய் குழந்தைகளை பார்க்க அழைத்து செல்ல மறுத்து விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உத்தம பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்