search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயின்போ நகரில் மின்துறை ஊழியர் மனைவி தற்கொலை
    X

    ரெயின்போ நகரில் மின்துறை ஊழியர் மனைவி தற்கொலை

    ரெயின்போ நகரில் மின்துறை ஊழியர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி. இவர் புதுவை மின்துறையில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கலைச்செல்வியை பார்பதற்காக அவரது அண்ணன் சண்முகம் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சண்முகம் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கலைச்செல்வி மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து கலைச்செல்வியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கலைச்செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்- இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மனநிலை பாதிப்பால் கலைச்செல்வி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    Next Story
    ×