search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilathikulam"

    • போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது.
    • சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டி பிடித்தது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 63-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் நடைபெற்றது. இதில் முதலாவதாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் இடத்தை சண்முகாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாட்டு வண்டியும், 2-வது இடத்தை ஏ.எம். பட்டி ரவி மாட்டு வண்டியும், 3-வது இடத்தை ஓட்டப்பிடாரம் கணேசன், சக்கம்மாள்புரம் தாவீது மாட்டு வண்டியும் பிடித்தன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 38 வண்டிகள் கலந்து கொண்டன. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் கூடி நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கிராம சமுதாய தலைவர் முருகன், செயலாளர் செல்வம், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் ரோடு, பஸ் நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் உட்பட வருவாய்த்துறை ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், விளாத்திகுளம் அரசு பள்ளி ஆசிரியர் சேகர், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • அமுதமலர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜோன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.

    அப்போது புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி, புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நுண்கதிர்வீச்சு மையத்தை திறந்து வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நுண்கதிர்வீச்சு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜே.எஸ்.டபிள்யூ. அலுவலர் சந்திரமோகன், மருத்துவர் உமா செல்வி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதகண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழஈரால் ஊராட்சி தலைவர் பச்சை பாண்டி, கிளை செயலாளர் சண்முகவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் மருத்துவ ஊழியர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.
    • நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம், தாப்பாத்தி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.

    இந்த கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தி னராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்ட றிந்து அதை மனுக்களாக பெற்றுக் கொண்டார்.

    பின்னர் வேளாண் இடு பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கினார். மேலும் தூய்மை காவலர்களுக்கு பொதுமக்கள் முன்னிலை யில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டு ஊக்கத் தொகை வழங்கினார்.

    மருத்துவ முகாம்

    நிகழ்ச்சிக்கு முன்னதாக ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த கொதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்கான பரிசோதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எட்டையா புரம் தாசில்தார் மல்லிகா, சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் ரகுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்க டேசன், உதவி செயற் பொறியாளர் செந்தில் குமார், உதவி மின் பொறி யாளர் செல்வகுமார், வேளாண்மை துறை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் நஸிமா, புதூர் மேற்கு ஒன்றிய செய லாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத் துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, புதூர் மேற்கு ஒன்றிய ஆதி திராவிடர் நல அணி அமைப்பாளர் கணேச பாண்டியன், கிளைச் செய லாளர் வள்ளியப்பன், எட்டையபுரம் நகர இளை ஞரணி துணை அமைப் பாளர் அருள் சுந்தர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சுமணனுக்கு சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 57) மற்றும் அவரது மனைவி குட்டியம்மாள் இருவரும் சேர்ந்து அதே கிராமத்தில் பல ஆண்டுகளாக கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நகைகளை அடகு வைத்து, பணத்தை வட்டிக்கு வாங்கி அதிக முதலீடு செய்து விறகுகள், தூர் கட்டைகளை வாங்கி கடந்த சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்ததில், அவற்றையெல்லாம் விற்பனை செய்யவிருக்கும் நேரத்தில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த கனமழை காரண மாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் லட்சுமணனுக்குச் சொந்தமான 17 கரிமூட்டம் குவியல், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளத் தில் அடித்து செல்லப் பட்டது.

    இதனால் ரூ.55 லட்சம் மதிப்புள்ள கரிகளை இழந்துவிட்டோமே என்று என்னசெய்வதென்று தெரியாமல் லட்சுமணனும், அவரது மனைவி குட்டியம்மாளும் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் என அரசு அதிகாரிகளுடன் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வாழ்வாதா ரத்தை இழந்து தவித்து வந்த லட்சுமணன் - குட்டியம்மாள் தம்பதியினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கி., தமிழக அரசிடமிருந்து நிதி உதவி பெற்றுத்தர உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதுகுறித்து நஷ்டத்தை சந்தித்த தம்பதியினர் கூறுகையில்:-

    இது போன்ற வெள்ளம் இதுவரை வந்ததே இல்லை. நேற்று முன்தினம் வந்த வெள்ளத்தால் நல்ல விலைக்குப் போகவிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கரிக்கட்டைகள் முற்றிலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதிலிருந்து மீண்டு வர தமிழக அரசு தான் தங்களுக்கு உதவ வேண்டும் என கூறினர்.

    • 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவஞானபுரம், சக்கமாள் புரம், அருங்குளம், வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இலவச வீட்டுமனை பட்டா

    இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ., கலெக்டர் லட்சுமி பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு 58 பயனாளி களுக்கு 20 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இறப்பு நிவாரணம், உழவர் பாது காப்பு திட்ட உறுப்பினர் பதிவு, விவசாய இடு பொருட்கள் உள்ளிட்ட வைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை கடந்த சில வாரங்களாக ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

    100 நாள் வேலை திட்டம்

    100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனவே 100 நாள் ஊதியம் விரைவில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பதிவேற்றத்தின் போது சிறு சிறு பிழைகள் ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் விண்ணப் பங்கள் கள ஆய்வு செய்யப் பட்டு வருகின்றன. விரை வில் தகுதி உள்ளவர்க ளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவரது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் விளாத்தி குளம் தாசில்தார் ராம கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், வேளாண்மை துணை இயக்குனர் கீதா, விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜ், கிழக்கு ஒன்றிய செய லாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வ ராஜ், மும்மூர்த்தி, கோவில் பட்டி கிழக்கு ஒன்றிய செய லாளர் நவநீத கண்ணன், மாவட்ட கவுன்சிலர் நட ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானு வேல், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப் பாளர் பாண்டியராஜன், மார்த்தாண்டம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்துக் கரும்புலி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கரண்குமார் மற்றும் கிளை செயலாளர்கள், அரசு அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகி கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர்கள் எபனேசர், ஹெப்சிபா ஜோன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒப்பந்த தாரர் சுப்பாரெட்டியார், அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் தங்க பாண்டியம்மாள், வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒன்றிய பிரதிநிதி சர்க்கரை, கிளை செயலாளர்கள் நாக ராஜ், மணி பிரகாசம், வேல் ராஜ், மாரிச்சாமி, பெரிய சாமி, சுப்பையா, குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அயன் பொம்மையாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அயன் பொம்மையாபுரம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் விஜய் ஸ்ரீ தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி முன்னிலையில் விளாத்திகுளம் கால்நடை மருத்துவ குழுவினர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகியோர் இணைந்து சுமார் 1085-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.

    இம்முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக பங்கேற்ற பொதுமக்கள் பாராட்டினர். முகாமில் கால்நடை மருத்துவர் கருப்பசாமி, பாலமுருகன், புவனேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • லட்சுமணன் 2 ஆண்டு களுக்கு முன்பு குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
    • லட்சுமணன் அம்பிகாபதி வைத்திருந்த அரிவாளை பிடுங்கி வெட்டியதாக கூறப்படு கிறது.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்.

    இவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு விளாத்தி குளம்-மதுரை சாலையில் உள்ள குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

    இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி. ராமச்சந்திரா புரம் கிராமத்தில் ரேஷன் கடையில் பணி யாற்றி வந்தார்.

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந் நிலையில் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரண மாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவது வழக்க மாக இருந்துள்ளது.

    லட்சுமணன் இரவு பணியை முடித்து விட்டு தினம்தோறும் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு திடீரென லட்சு மணன் சென்றுள்ளார்.

    அப்போது வீட்டின் உள்ளிருந்து வந்த அம்பிகா பதி இப்போது எதற்கு வந்தீர்கள் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் லட்சுமணன் அம்பிகாபதி வைத்திருந்த அரிவாளை பிடுங்கி வெட்டியதாக கூறப்படு கிறது.

    இதில் சம்பவ இடத்திலே அம்பிகாபதி துடிதுடித்து இறந்தார். அக்கம் பக்கத்தி னர் விளாத்திகுளம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அம்பிகா வதி உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லட்சு மணனையும் தேடி வருகின்ற னர்.

    • முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • தொடர்ந்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பள்ளியில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தவமணி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி, கிளைச் செயலாளர்கள் முருகன், கந்தவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், உட்பட தி.மு.க. நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வைப்பாற்றின் குறுக்கே உருளைகுடி ஊராட்சி பீக்கிலி பட்டி கிராமம் முதல் சங்கராபுரம் கிராமம் வரை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தை இணைக்கும் வகையில் நெல்லை நபார்டு நெடுஞ்சாலை கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ரூ.6.27 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டே யன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் முருகேசன், ராதா கிருஷ்ணன், நவநீத கண்ணன், சின்ன மாரி முத்து, ராம சுப்பு, விளாத்தி குளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதர், சாத்தூர் ஒன்றிய பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×