search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Voter Awarness Rally"

    • பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் ரோடு, பஸ் நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் உட்பட வருவாய்த்துறை ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், விளாத்திகுளம் அரசு பள்ளி ஆசிரியர் சேகர், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • பேரணியை தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் தலைமையில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். வருவாய் தாசில்தார் கிருஷ்ணவேல், தேர்தல் தனி துணை தாசில்தார் மாசானமூர்த்தி, தேர்தல் வருவாய் உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணி ஆலங்குளம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகத்தில் முடிவுற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் பற்றிய கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவர்கள் ஜோகன்னா, ஜெய டேவிசன் இம்மானு வேல், ஜெஸிக்காள் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×