search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
    X

    விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

    • பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் ரோடு, பஸ் நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் உட்பட வருவாய்த்துறை ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், விளாத்திகுளம் அரசு பள்ளி ஆசிரியர் சேகர், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×