search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaithilingam"

    • பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது.
    • முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.

    இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான்.

    நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம்.
    • ‘மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எந்திரம் தொடர்பாக அதன் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை வருகிற 16-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவணங்கள் படி தமிழக தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அப்படி திருப்பி அனுப்பினால் அவர்கள்(எடப்பாடி பழனிசாமி) அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம். அ.தி.மு.க.வில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சந்தித்துக் கொண்டனர்.

    அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் பின்னர் பேசியதாவது:-

    சசிகலாவை எதேச்சையாக சந்தித்தேன். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அதிமுகவில் ஒற்றுமை தேவை. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்

    தன்னை காப்பாற்றிக்கொள்ள யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு ஈபிஎஸ் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்திற்கு கொரோனா.
    • வைத்திலிங்கம் அவரது சென்னை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது திடீரென அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பலர் முககவசம் அணியாமல் செல்வதால் கொரோனா எளிதில் பரவி விடுகிறது.

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு 5 நாட்களாக காய்ச்சல் உள்ளது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.

    தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 23-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றபோது வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.

    அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பெரியகுளம் திரும்பி வந்த போதும் விமான நிலையத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். இதில் பலர் முககவசம் அணியாமல் சென்றதால் அவர்களில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் இருமல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு பிறகு இருமல் சரியாகி உள்ளது. இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலருக்கு காய்ச்சல் இருமல் ஏற்பட்டுள்ளது.

    இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி பலர் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் வந்தாலும் 5 நாட்களில் சரியாகி விடுவதாக தெரிவித்தனர்.

    • அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
    • அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    சென்னை:

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
    சென்னை:

    மோடி தலைமையிலான புதிய மத்திய மந்திரி சபை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பதவி ஏற்க உள்ளது.

    ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வர இருப்பதால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே புதிய அமைச்சரவையில் யார்- யாரை மத்திய மந்திரிகளாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி தனிப்பட்ட முறையில் 303 இடங்களைக் கைப்பற்றி இருப்பதால் மத்திய மந்திரி சபையில் முக்கியமான, பெரும்பாலான மந்திரிகள் பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

    என்றாலும் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியினரையும் மத்திய மந்திரி சபையில் இடம்பெற செய்ய மோடி முடிவு செய்துள்ளார். எனவே சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., அகாலி தளம், லோக் ஜனசக்தி, அப்னா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

    பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சிவசேனா 18 எம்.பி.க்களை வைத்துள்ளது. கடந்த தடவை 3 மந்திரி பதவி பெற்ற சிவசேனா இந்த தடவை 4 மந்திரி பதவிகளை கேட்கிறது. 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 மந்திரி பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், அப்னா தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த மூன்று கட்சிகளுக்கும் தலா ஒரு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆல் ஜார்க்கண்ட் ஸ்டூடன்ட்ஸ் யூனியன், ராஜஸ்தானில் லோக் தந்திரிக் கட்சி, நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி, மிசோரமில் மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் வென்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் 38 இடங்களில் அ.தி.மு.க. மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அ.தி.மு.க.வுக்கு மத்திய மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க மோடி முடிவு செய்துள்ளார். அந்த ஒருவர் யார் என்பதை தெரிவிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.


    இந்த நிலையில் அ.தி.மு.க. தரப்பில் 2 மத்திய மந்திரி பதவிகளை தருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த இரு மந்திரி பதவிகளில் ஒரு பதவி, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமாருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இலாகாவை பெற காய்களை நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வைத்திலிங்கம் மத்திய மந்திரி பதவி பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லி மேல்- சபையில் எம்.பி. ஆக இருக்கும் வைத்திலிங்கத்தை மத்திய மந்திரியாக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார்.

    பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ள போதிலும் மேல்-சபையான மாநிலங்கள் அவையில் தற்போது அ.தி.மு.க.வுக்கு 13 எம்.பி.க்கள் உள்ளனர். வருகிற ஜூலை மாதம் மேல்-சபை தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. மேல்-சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும்.

    டெல்லி மேல்-சபையில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் இல்லை. எனவே மேல்-சபையில் அ.தி.மு.க.வின் தயவு பாரதிய ஜனதாவுக்கு தேவை என்ற நிலை உள்ளது. மேல்- சபையில் 12 எம்.பி.க்களை வைத்திருப்பதால் அ.தி.மு.க.வுக்கு இரண்டு மத்திய மந்திரிகள் தருவதுதான் நியாயமானதாக இருக்கும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த வாதத்தை பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு இரு மந்திரி பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில் வைத்திலிங்கம், ரவீந்திரநாத்குமார் இருவரும் மந்திரி ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் ராஜாங்க இலாகா கொடுக்கப்படலாம்.

    இதற்கிடையே டாக்டர் அன்புமணியையும் மேல்- சபை எம்.பி. என்ற அந்தஸ்துடன் மத்திய மந்திரியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. மீண்டும் அவருக்கு சுகாதாரத் துறையை பெற காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன. ஆனால் பா.ம.க.வின் விருப்பத்தை பாரதிய ஜனதா நிறைவேற்றுமா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
    புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஒரே ஒரு எம்.பி. தொகுதி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    அதேபோல் பாரதிய ஜனதா கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி இருந்தனர்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கமும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமியும் போட்டியிட்டனர். அ.ம.மு.க. சார்பில் தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் எம்.ஏ.சுப்பிரமணியன் போட்டியிட்டார்கள்.

    புதுவை தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் இருந்தார்.

    முதல் சுற்றில் 69 ஆயிரத்து 421 ஓட்டுகள் எண்ணப்பட்டு இருந்தன. அதில், வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகளும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி 20 ஆயிரத்து 959 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

    இதன் மூலம் வைத்திலிங்கம் 20 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
    பாராளுமன்ற தேர்தலுக்காக கிராம சபை கூட்டத்தை நாடகம் போல் மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாக வைத்திலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். #Vaithilingam #MKStalin
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தர மக்களும் பொங்கல் பரிசு பெற்று பயன்பெற வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். அதன்படிதான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்தார்.

    மக்கள் எல்லோரும் பயன் பெற வேண்டிய திட்டத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதற்குப் பிறகு வழங்கப்படும்.

    கிராமசபை கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படைத் தேவைகளைக் கேட்டு அவற்றை பூர்த்தி செய்தார்கள்.

    இன்னும் மூன்று மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது ஒரு நாடகம் போல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    தஞ்சை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் பயன்பெறுவதற்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அந்த வகையில் ஆய்வு செய்து தமிழக அரசு மக்களுக்கு சிறிதளவும் துன்பம் வராமல் செய்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நிதி நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaithilingam #MKStalin
    காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேத அறிக்கையை விரைந்து அனுப்ப கோரி அதிகாரிகளுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். #gajacyclone #cyclone
    காரைக்கால்:

    புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை, பார்வையிட்டார். குறிப்பாக, மீராபள்ளி வீதி, தோமாஸ் அருள்வீதி, மத கடி, தலத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், புயலின் போது கடல்நீர் உள் புகுந்த தலத்தெருபேட் பகுதியையும் சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், புதுவை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் கேசவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் கஜா புயல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையின் முடிவில், காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேதம் குறித்து, முழுமையான அறிக்கை தயார் செய்யவேண்டும். அதில் எந்தவித குறைபாடுகளும் இருக்ககூடாது. அந்த அறிக்கையை வைத்துதான் மத்திய அரசிடம் சேத நிவாரணம் பெறமுடியும். அதேசமயம், அறிக்கையாக விரைவாக தயார் செய்து அனுப்ப வேண்டும். என்றார். #gajacyclone #cyclone
    18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியில் கூறியுள்ளார். #MLAsDisqualified #Vaithilingam

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:-ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா?

    பதில்:- ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்.

    கேள்வி:-குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தது குறித்து?

    பதில்:- அமைச்சர் விஜயபாஸ்கர் ‘மடியில் கனம் இல்லை. இதனால் எனக்கு பயம் இல்லை’ என்று அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடைபெறும் போது அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. விசாரணை முடிவில் தான் அதற்கான நடவடிக்கை குறித்து தெரியும்.

    கேள்வி:- காவிரியில் தண்ணீர் வந்தும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வர வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்களே?

    பதில்:- காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் சில நாட்களில் சென்று விடும். அதன்பின்னர் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூர்வாரும் பணியை பொறுத்தவரை மிக அற்புதமாக நடந்து வருகிறது.

    கேள்வி:- 18 எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதே?

    பதில்:- இந்த வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×