என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி
- ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்திற்கு கொரோனா.
- வைத்திலிங்கம் அவரது சென்னை இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது திடீரென அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முககவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பலர் முககவசம் அணியாமல் செல்வதால் கொரோனா எளிதில் பரவி விடுகிறது.
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் எடப்பாடி பழனிசாமி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருக்கு 5 நாட்களாக காய்ச்சல் உள்ளது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார்.
தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த 23-ந்தேதி வானகரத்தில் நடைபெற்றபோது வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்தனர்.
அதேபோல் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பெரியகுளம் திரும்பி வந்த போதும் விமான நிலையத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் குவிந்தனர். இதில் பலர் முககவசம் அணியாமல் சென்றதால் அவர்களில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் இருமல் காரணமாக அவதிப்பட்டார். அவருக்கு 2 நாட்களுக்கு பிறகு இருமல் சரியாகி உள்ளது. இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலருக்கு காய்ச்சல் இருமல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி பலர் போட்டுக் கொண்டதால் காய்ச்சல் வந்தாலும் 5 நாட்களில் சரியாகி விடுவதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்