search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karaikal district"

    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. #HeavyRain
    காரைக்கால்:

    தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வந்தது.

    இன்று அதிகாலை காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடை விடாது கனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதேப்போல் திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. #HeavyRain
    காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேத அறிக்கையை விரைந்து அனுப்ப கோரி அதிகாரிகளுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். #gajacyclone #cyclone
    காரைக்கால்:

    புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தை, பார்வையிட்டார். குறிப்பாக, மீராபள்ளி வீதி, தோமாஸ் அருள்வீதி, மத கடி, தலத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், புயலின் போது கடல்நீர் உள் புகுந்த தலத்தெருபேட் பகுதியையும் சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், புதுவை வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் கேசவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் வைத்திலிங்கம் கஜா புயல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையின் முடிவில், காரைக்கால் மாவட்ட கஜா புயல் சேதம் குறித்து, முழுமையான அறிக்கை தயார் செய்யவேண்டும். அதில் எந்தவித குறைபாடுகளும் இருக்ககூடாது. அந்த அறிக்கையை வைத்துதான் மத்திய அரசிடம் சேத நிவாரணம் பெறமுடியும். அதேசமயம், அறிக்கையாக விரைவாக தயார் செய்து அனுப்ப வேண்டும். என்றார். #gajacyclone #cyclone
    கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் விநியோகம் 4-வது நாளாக தடைப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. #gajacyclone #darkness

    காரைக்கால்:

    ‘கஜா’ புயலால் காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், படகுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 15-ந் தேதி முதல் மின் விநியோகம் தடைப்பட்டது. மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சில பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

    ஆனால், நிரவி, தூதுபோன மூலை, மானாம்பேட்டை, ஓடுதுறை, விழுதியூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேருவீதி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்சினையும் நிலவி வருகிறது. அவர்கள் கடைகளுக்கு சென்று குடிநீர் கேன் வாங்கி பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளன.

    செல்போனுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில் உள்ளனர்.

    புயலால் கீழே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ‘கஜா’ புயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. அந்த பொருட்களை சாலையில் போட்டு செல்கின்றனர். தற்போது அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனை சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #gajacyclone #darkness

    ×