search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "darkness"

    • கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது.
    • சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளஞ்சி, தளிஞ்சிவயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, காட்டுப்பட்டி, பூச்ச கொட்டாம்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய் மற்றும் வனத்துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடையாததால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    அந்த வகையில் மலைவாழ் குடியிருப்புகளுக்கு ஒளி ஏற்றும் விதமாக சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் தொகுதி நிதியில் இருந்து அமைத்து தரப்பட்டது. அதன் பின்பு அதை முறையாக பராமரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் படிப்படியாக பழுதடைந்து தற்போது கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

    இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை அரசுத்துறைகள் சார்பில் செய்து கொடுப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.ஆனால் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்ட பின்பு அதனை பராமரித்து முழுமைப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால் திட்டங்கள் தொடங்கப்பட்ட வேகத்திலேயே செயலிழந்து பழுதடைந்து காட்சி பொருளாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புகளில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய சோலார் விளக்குகள் அமைத்து தரப்பட்டது. அவற்றை அவ்வப்போது பராமரித்து நடைமுறையில் இருக்க வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த விளக்குகள் ஒவ்வொன்றாக பழுது அடைந்து தற்போது முற்றிலுமாக அனைத்து விளக்குகளும் காட்சி பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாக கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது.

    இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் வனவிலங்குகள் தடம் மாறி குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதை விரட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது மனிதன் வன விலங்குகள் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் மலைவாழ் கிராமங்களில் ஆய்வு செய்து பழுதடைந்த சோலார் விளக்குகளை புதுப்பித்து கிராமங்களுக்கு இரவில் ஒளியேற்றி வைக்க வேண்டும்.

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றுப்பாலம் இருளில் மூழ்கியது.
    • மின்தடையை சரிசெய்து உடனடியாக மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கீழ்கரை- மேல்கரை பகுதிகளை இணைக்கும் வைகை ஆற்றுபாலத்தில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் நடைமேடைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும் செல்போன் டார்ச் லைட் மூலம் நடந்து செல்கின்றனர். ஒருவாரமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்படுகிறது. தற்போது வைகைஆற்றில் தண்ணீர் செல்வதால் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்து உடனடியாக மானாமதுரை வைகைஆற்றில் மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் விநியோகம் 4-வது நாளாக தடைப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. #gajacyclone #darkness

    காரைக்கால்:

    ‘கஜா’ புயலால் காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், படகுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 15-ந் தேதி முதல் மின் விநியோகம் தடைப்பட்டது. மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சில பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

    ஆனால், நிரவி, தூதுபோன மூலை, மானாம்பேட்டை, ஓடுதுறை, விழுதியூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேருவீதி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்சினையும் நிலவி வருகிறது. அவர்கள் கடைகளுக்கு சென்று குடிநீர் கேன் வாங்கி பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளன.

    செல்போனுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில் உள்ளனர்.

    புயலால் கீழே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ‘கஜா’ புயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. அந்த பொருட்களை சாலையில் போட்டு செல்கின்றனர். தற்போது அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனை சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #gajacyclone #darkness

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு இடைவிடாது கன மழை பெய்ததால் பேரிஜம் ஏரி, கொழுவம்பட்டியில் உள்ள கோணலாறு ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது.

    இந்த தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடி அமராவதி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட் உள்ளிட்ட செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இடைவிடாது பெய்த கன மழையினால் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மின் கம்பிகள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும் மின்சாரம் இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ×