search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training"

    • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
    • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

    இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முத்தனூர் தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
    • அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.

    வெள்ள பாதிப்புகளின் போது பழைய பொரு ட்களைக் கொண்டு மீட்பு பணிகள் மேற்கொ ள்வது, தீவிபத்தின் போது தற்காப்பு நடவடிக்கை உள்ளிட்ட வைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்த னர். மேலும் கட்டிட இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    • பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி
    • பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புபயிற்சி மையத்தின் மூலம்பெண்களுக்கான தையல்கலை பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது.

    மேலும் இப்பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப்பாவாடை , யூனிஃபார்ம்ஸ்கர்ட், அரைக்கை சர்ட், யூனிஃபார்ம் டிராயர் , பேபி ஃபிராக், கட்டோரி பிளவுஸ் , நைட்டி , சுடிதார் டாப் , அம்பர்லா டாப் , நைட் சூட் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட இருக்கின்றது.

    பயிற்சியின்காலஅளவு 30 நாட்கள் பயிற்சிநேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை. பயி ற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் கா லை,மாலை தேனீர்வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க ஆலோசனை வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் , பான் கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அக்டோபர் 18-ந் தேதி நடக்கவிருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    • பூச்சிகளின் இனப்பெருக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.
    • காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே நாகக்குடி ஊராட்சியில் உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.

    இதில் 25 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு 5 விவசாயிகள் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் சிலந்தி, பொறிவண்டு, தரை வண்டு, ஊசித்தட்டான், குளவி என தனித்தனியே பெயர்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு குழுவும் வயல் பகுதிக்கு சென்று நன்மை, தீமை செய்யும் பூச்சிகளை இனம் கண்டு அவைகளின் இருப்பிடம், உணவு, இனப்பெருக்கம் ஆகியவை குறித்து அறிந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு கும்பகோணம் வட்டார வேளாண்மை அலுவலர் அசோக்ராஜ், கும்பகோணம் வட்டார துணை வேளாண் அலுவலர் சாரதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை பகுதி உதவி வேளாண்மை அலுவலர் துர்கா தேவி செய்திருந்தார்.

    பயிற்சியில் பார்வையிட்ட வகையில் வயல்களில் பாசி அதிகளவு காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட பரிந்துரை செய்யப்பட்டது.

    • மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது
    • கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ரா.மது அறிவிப்பு

    ஊட்டி,

    ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மைக் கிளையில் நடப்பு ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் ரா.மது கலந்து கொண்டு பேசியதாவது:

    கூட்டுறவு பயிற்சியை ஆா்வம், முழு ஈடுபாட்டுடன் பயில வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் இருப்பு நிலை குறிப்பு தயாரிப்பதற்கான பயிற்சி, கணக்கு பதிவியல் மற்றும் கூட்டுறவு தணிக்கை பாடங்களின் மூலம் கற்றுத்தரப்படும்.

    நடப்பு ஆண்டுக்கான முழுநேர பட்டயப்பயிற்சி மாணவா் சோ்க்கைக்காண கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அத்தாட்சி செய்த நகல்களுடன் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் நேரடியாக வந்திருந்து பயிற்சி நிலைய முதல்வரை அணுகலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

    நிகழ்ச்சியில் ராமலிங்க கூட்டுறவு சங்க துணைப்பதிவாளா் கே.ஆா்.விஜயகணேஷ், விரிவுரையாளா்கள் ஜெ. மணி, சந்திரசேகா் மற்றும் பயிற்சி மாணவ, மாணவியா் ஆகியோா் பங்கேற்றனா்.

    • திருச்சி - லால்குடிகூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்
    • 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    திருச்சி,  

    திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தின் முதல்வர், லால்குடி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    திருச்சி, லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ பயிற்சியில் சேருவதற்கு செப்டம்பர் 22-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்க நாளை 6-ந்தேதி கடைசி நாள்.

    இப்பயிற்சியில் பிளஸ் 2, பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்து பின்னர் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 1-ந்தேதி 17 வயது நறைவு பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக ரூ.200. பயிற்சி கட்டணம் 18 ஆயிரத்து 750 ரூபாய். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை மேலாண்மை நிலையத்திற்கு எடுத்து வந்து நேரில் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மேலாண்மை நிலையம், பழைய குட்ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ அல்லது 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இதே போல லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், லால்குடி கூட்டுறவு பல்தோழில் நுட்ப பயிலக கல்லூரி வளாகம், அய்யன் வாய்க்கால் ரோடு, ஆங்கரை கிராமம், லால்குடி என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ, அல்லது 9489955214 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • அரியலூர்அரசு கலைக் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறுகிறது
    • 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், வேலை வாய்ப்பு மையம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மத்திய, மாநில அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.இப்பயிற்சியை அக்கல்லூ ரியின் முதல்வர்டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்து பேசினார். மாவட்ட தேசிய தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் இளம் தொழிலர் எபினேசர் கலந்து கொண்டு, கல்வி பயிலும் காலத்திலேயே கிடைக்கும் இந்த வாய்ப்பி னை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வேண்டும் என்றார்.கல்லூரியில் தற்போது இறுதி ஆண்டு பயின்றுவரும் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளைச்சார்ந்த 150 மாணவ, மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலர்கருணாகரன், பொருளாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்ப ினர்கள்தண்டபாணி, சிவக்குமார், ஜெயக்குமார், கென்னடி, கண்ணன், மேரி வயலட் கிருஸ்டி, ஆனந்த், காமஞ்சரி, நேசமதி உறுப்பினர்கள் மற்றும் பயிற்றுநர்கள் தர்மராஜ், ஸ்ரீதேவி, ஸ்வாதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பயிற்சி நிலையத்தில் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட ப்படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களுக்கோ 94435 87759, 94860 45666 அல்லது முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரியில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குப்பதேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபா வாசத்தி ரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்கு மார் பயிற்சி குறித்து விவசாயிகளிடம் பேசியதா வது, நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறை குறித்தும், சொட்டுநீர் பாசன கருவிகளான வடிகட்டி, அழுத்தமானி, சொட்டுநீர் பாசன குழாய்கள், வெஞ்சுரி (உரம் செலுத்தும் கருவி) ஆகியவற்றின் பராமரிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்ப டும் ஆவணங்கள்.

    அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுக ளை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திரு ந்தனர்.

    முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரம ணியன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
    • ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு

    பெரம்பலூர்,  

    பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அம்மையத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் அருகே செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் வெள்ளாடு வளர்ப்பு - இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் பதிவுசெய்து இலவசமாக பயிற்சி பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
    • 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.

    இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொழுப்பை கரைக்க பல வகையில் முட்டுக்கட்டை போடும்.
    • உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    நீங்கள் நாள் தவறாமல் ஜிம்முக்கு போய் உடல் பயிற்சி செய்துவந்தால், உடலுக்கு நல்லதுதான். ஆனால் நீங்கள் பருமனாக இருக்கும் பட்சத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஜிம் போகும்போது நீங்கள் கவனத்தில் வைக்கவேண்டிய சில விஷயங்கள்:

    ஜிம் சென்று தான் உடலை குறைப்பேன் என்று நீங்கள் சபதம் எடுத்துவிட்டால், அது ஒரு நீண்ட பயணம் என்பதை என்றைக்கும் மறக்காதீர்கள். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். இதனை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    உங்கள் உடல் "கொழுப்பு சேமிக்கும் கிடங்காக" பல காலம் இருந்தபடியால், உடனே குழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    நீங்கள் உடல் பயிற்சி செய்யத்தொடங்கிய சில வாரங்களுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு மேலோங்கத் தொடங்கும். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுவித்துக்கொண்டு உங்களை தட்டிக்கொடுக்க இயலும்.

    அதனால் எக்காரணம் கொண்டும், வெற்றி எளிதாக வந்து சேரும் என்று எண்ணவேண்டாம். உடற்பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட வேண்டாம்.

    வெறும் ஜிம் மட்டுமே சென்று பயிற்சிகள் பல செய்வேன், ஆனால் கண்டதை திண்பேன் என்று நினைத்தால், அங்கே மாபெரும் தவறினை செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடல் பயிற்சியும், சரியான டயட்டும் இரு கைகளை போன்றது. பருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்று ஒரு பட்டியலை வாங்கிவிடுவது சிறந்தது. உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய வாய்ப்புகள் அதிகம்.

    ×