search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்
    X

    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்

    • திருச்சி - லால்குடிகூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்
    • 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    திருச்சி,

    திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தின் முதல்வர், லால்குடி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    திருச்சி, லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ பயிற்சியில் சேருவதற்கு செப்டம்பர் 22-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்க நாளை 6-ந்தேதி கடைசி நாள்.

    இப்பயிற்சியில் பிளஸ் 2, பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்து பின்னர் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 1-ந்தேதி 17 வயது நறைவு பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக ரூ.200. பயிற்சி கட்டணம் 18 ஆயிரத்து 750 ரூபாய். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை மேலாண்மை நிலையத்திற்கு எடுத்து வந்து நேரில் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மேலாண்மை நிலையம், பழைய குட்ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ அல்லது 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இதே போல லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், லால்குடி கூட்டுறவு பல்தோழில் நுட்ப பயிலக கல்லூரி வளாகம், அய்யன் வாய்க்கால் ரோடு, ஆங்கரை கிராமம், லால்குடி என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ, அல்லது 9489955214 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×