search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு"

    • கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.
    • மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    அரியலூர்

    கூட்டுறவு சங்கங்களின் அரியலூர்மண்டல இணை பதிவாளர்தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூ ர்மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் துணைபயிற்சி நிலையம் 2023-2024-ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி பகுதிநேர மாற்றத்திற்குட்பட்ட கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள், கட்டணம், ரூ.100 இணையவழியில் செலுத்தி இந்த மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அரியலூர்மாவட்டத்தை சார்ந்த

    விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி முதல் நாளை (20-ந்தேதி) வரை நாடு முழுவதும் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டா டப்பட்டு வருகிறது.

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை ஒரு டிரில்லிய னாக்குவதில் கூட்டுறவின் பங்கு எனும் கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வரு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவின் 7-வது நாளான நாளை 20-ந்தேதி அன்று கூட்டுறவு கல்வி மற்றும் பயிற்சியை சீரமைத்தல் என்ற தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் கொண்டாடப்பட இருக்கிறது.

    விழாவிற்கு கன்னியா குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்குகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலை வகிக்கிறார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

    விழாவில் பொதுமக்கள், கூட்டுறவாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய கூட்டுறவு வார விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாவானது கடந்த 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்டது. இந்த கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது. மேலும் 282 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ரூ.1.28 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

    திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம் சங்கத்தின் செயலாட்சியர் லீலா கூட்டுறவு சார்பதிவாளரால் பெறப்பட்டது.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார், குடும்ப அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும்
    • பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இது நாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அதனை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ. வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இதனால் தாங்கள் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது புகைப்படம்,ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை ஒரு வார காலத்திற்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் 2023-24 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகிற 6-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பு பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.200 பயிற்சி நிலையத்தில் நேரில் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்ட ப்படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரின் தொலைபேசி எண்களுக்கோ 94435 87759, 94860 45666 அல்லது முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர்-அஞ்சல், பட்டுக்கோட்டை- 614602 என்ற முகவரியில் நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
    • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    விருதுநகர்

    மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்படும் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி www.tncuicm.com மூலம் 13.9.2023 முதல் 22.9.2023 வரை பெறப்படுகிறது.

    விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள் 22.9.2023 பிற்பகல் 5 மணி வரை ஆகும். மாணவர் சேர்க்கைக் கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண் டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழு நேரம்), பயிற்சி காலம் ஓராண்டு (இரண்டு பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். இதர தகவல்களை அறிந்து கொள்ள www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல் வர் (பொறுப்பு) அலை பேசி எண்: 88071 59088 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • பெரம்பலூர் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் தொடக்கம்
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பிஆர் 10 மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். அப்போது அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன், மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான அரசு , பெரம்பலூர் சரக துணை பதிவாளர் அ. இளஞ்செல்வி பெரம்பலூர் நகர மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவர் வேப்பந்தட்டை க. ராமலிங்கம் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கடன் மேலாவிற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கூட்டுறவு சங்கம் தலைவர் கருணாநிதி செய்து இருந்தார்.

    • திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
    • கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    மானாமதுரை

    திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
    • கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம் உர வகைகளை காட்சிப்படுத்தியது.
    • ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உர வகைகள், ஏடி.டி.42 வகை நெல்விதை, வேப்பம் புண்ணாக்கு துகள்கள் மற்றும் மண்புழு உரம் காட்சிபடுத்தப்பட்டது.

    மேலும் இந்த உரங்கள் தொடர்பான தெளிவான விளக்க உரையுடன் கூடிய பதாகைகளும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் புதிய வகை உரங்களை ஆர்வமுடன் விசாரித்து வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார்.

    இந்த கூட்டத்தில் விருது நகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, இணை பதிவாளர், அலுவலக துணை பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லி புத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் காந்திராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய விருதுநகர் மண்டல மேலாளர் ஜீவானந்தம், கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் செல்வராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    ×