search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
    X

    தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

    • முத்தனூர் தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
    • அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினார்கள்.

    வெள்ள பாதிப்புகளின் போது பழைய பொரு ட்களைக் கொண்டு மீட்பு பணிகள் மேற்கொ ள்வது, தீவிபத்தின் போது தற்காப்பு நடவடிக்கை உள்ளிட்ட வைகளை தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்த னர். மேலும் கட்டிட இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்கள்.

    Next Story
    ×