search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பராமரிப்பு பயிற்சி நடந்தது.

    விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன பயிற்சி

    • அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம் குப்பதேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயி களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சேதுபா வாசத்தி ரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) ஜி.சாந்தி தலைமை வகித்தார்.

    வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்கு மார் பயிற்சி குறித்து விவசாயிகளிடம் பேசியதா வது, நுண்ணீர் பாசன கருவிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு முறை குறித்தும், சொட்டுநீர் பாசன கருவிகளான வடிகட்டி, அழுத்தமானி, சொட்டுநீர் பாசன குழாய்கள், வெஞ்சுரி (உரம் செலுத்தும் கருவி) ஆகியவற்றின் பராமரிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க தேவைப்ப டும் ஆவணங்கள்.

    அமில கரைசல் மூலம் உப்பு அடைப்பான்கள் நீக்கும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுக ளை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திரு ந்தனர்.

    முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரம ணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×