search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toilet"

    • ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் பயன்பாட்டிற்கு கட்டண கழிப்பறை ஒன்றும், கட்டணமில்லா கழிப்பறை ஒன்றும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கட்டண கழிப்பறை மூடப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் இலவச கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் கதவு இல்லாமலும், கதவுகள் இருந்தால் தாழ்பாழ் இல்லாமலும் உள்ளது. மேலும் சிறுநீர் கழிக்குமிடத்தில் உள்ள கோப்பைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36)
    • வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 36). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    வேல்முருகன் தேவநல்லூர் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், அதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த கழிவறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    தற்போது தனது மகன் ரிஷி கிருஷ்ணனுடன் தென்காசி அருகே உள்ள குடியிருப்பு சர்ச் தெருவில் வசித்து வந்தார். சமீப காலமாக அகரக்கட்டு பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மறுநாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரமேஷ் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

    அவர் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து இறந்துள்ளார் என்பதை அறிந்த அவரது மகன், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாக கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வீரப்புடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போதுபள்ளியின் பின்புறம் பயன்படு த்தப்படாத கழிவறை பகுதியில் தூய்மை பணி செய்தபோது எதிர்பாராத விதமாக தொட்டியின் மேல் பகுதி உடைந்து விழுந்ததில் 7 பெண்கள் உள்ளே விழுந்து காயம் அடைந்தனர்.அவர்களை மீட்டு பூதலூர் மற்றும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், பள்ளியில் பணி செய்யும் போது அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், பெண் பணியாளர்களை மிரட்டி வேலை செய்ய வற்புறுத்தியதால்தான் கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாகவும் கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று காலை பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட னர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் நடந்த சாலை மறியலால் பூதலூர்- செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பாபநாசம் ஒன்றியம், கோபுராஜபுரம் ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஒருங்கி–ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை தகுதியினை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.பின்னர், கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் சத்துணவு தரம் குறித்தும், பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்தும், கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    கோபுராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவேடு–களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு–வர சம்பந்தப்பட்ட அலுவல–ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது உடன் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு, பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுஜாதா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் வட்டார குழந்தைகள் ஊட்டச்சத்து அலுவலர் லதா, ஒன்றிய பொறியாளர்கள் சுவாமிநாதன், சரவணன், கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனாளிகளில் 382 பயனாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினார்.
    • வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஒன்றிய த்தில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு திட்ட த்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்குநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கள ஆய்வு அட்டை வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வேதார ண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், பாஸ்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதிஆகியோர் கலந்துகொண்டு கத்ததிரி புலம், ஆதனூர், கருப்பம்புலம் ,குரவப்புலம், உள்ளிட்ட 36 ஊராட்சிகளில் 21- 22 ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனளிகளில் 382 பயணாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினர். வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வை பெற எனவும், திட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் ஊரக வளர்ச்சி இயக்கம் குறைய தீர்ப்பு மைய தொடர்பு எண்கள் 8925422215, 8925422216 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    • அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1000-க்கும் மேற்பட்டபயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்

    இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த ஆம்பூர் சிறுமிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். #AmburGirl #KapilDev
    ஆம்பூர்:

    ஆம்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

    விழாவில் பேசிய கபில்தேவ் கூறியதாவது:-

    இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். நல்ல பண்புகளை கொண்ட இளைஞர்களால் நம்நாடு பலம் மிக்க நாடாக உயரும்.

    இந்திய நாடு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.


    ஆம்பூரை சேர்ந்த சிறுமி ஹனீபாஷாரா தன்வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது பெருமைக்குரியதாகும். இதேபோல் நான் எனது மகளை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சாலை விதியை மீறியதால் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பிறகு நான் கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்து போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். ஆனால் எனது மகள் விதியை மீறியதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தினாள். நானும் அபராதம் செலுத்தினேன். அந்த அளவுக்கு குழந்தைகள் சிறு வயதிலேயே சட்டத்தை மதிப்பவர்களாக திகழ்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அறக்கட்டளையின் சார்பில் கழிவறை கட்டக்கோரி தந்தை மீது போலீசில் புகார் அளித்த ஆம்பூர் பள்ளி மாணவி ஹனீபாஷாராவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, கலாம் செயற்கை கோள் குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஸ்ரீமதி கீசன் குழுவினரை பாராட்டி ரூ.5 லட்சம் பரிசு தொகை, 50 பயனாளிகளுக்கு கழிப்பறை கட்டிய சாவி வழங்கி மற்றும் கிரிக்கெட் அகாடமியை கபில் தேவ் தொடங்கி வைத்தார். #AmburGirl #KapilDev
    நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் ரசிகர்கள் கிருஷ்ணகிரி அரசு பள்ளிக்கு கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளனர். #Rajinikanth #Rajinikanthfans
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சரியான கழிப்பறை வசதி இல்லை. இது தொடர்பாக பள்ளி சார்பில் கழிப்பறை கட்டித்தருமாறு நடிகர் ரஜினி காந்த்துக்கு கோரிக்கை விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ஆலோசனையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும், சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து ரூ. 1 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிக்கொடுத்தனர். இதற்காக சென்னையில் உள்ள ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்துக்கு நன்றி தெரிவித்து பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார்.

    நெடுநாட்களாக சரியான கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த எங்கள் பள்ளிக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றமும் இணைந்து சுமார் 1 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறையை இலவசமாக கட்டிக்கொடுத்து உள்ளனர்.

    இதற்காக எமது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் ரஜினி காந்த்துக்கும், சிங்கப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்துக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthfans
    கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.



    இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.



    அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் தொடர் போராட்டத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

    பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறுமி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.

    இந்த நிலையில் சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார்.

    ஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார். #Toilet #CollectorRaman
    ஆம்பூர்:

    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார்.

    இதற்கான பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஒரு சில நாட்களில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 2014 அக்டோபர் 2 முதல் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்ற மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

    கழிப்பறை வசதி இல்லாத சிறுமியின் வீடு.

    பொதுமக்கள் கழிவறைகளை கட்டாயம் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று கழிப்பறையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து கிராம புறங்களில் மகளிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் அதிகளவில் செய்தனர். இதுவரை சுமார் 3 லட்சம் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறுமிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கலெக்டர் ராமன் பாராட்டியுள்ளார்.

    இதேபோல கழிவறை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். #Toilet #CollectorRaman
    ஆம்பூரில் வீட்டில் கழிவறை கட்டி தராத தந்தையை கைது செய்யுங்கள் என்று 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலி தொழிலாளி. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது.

    இதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மகள் தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டிதரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். கழிவறை கட்டி தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தரும்படி தன்னுடைய கைப்பட எழுதி புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியை பார்த்து சிறுமியை பாராட்டினார்.

    தந்தை மீது புகார் அளித்த மகள், தாயாருடன் இருப்பதை படத்தில் காணலாம்.

    பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசினார். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கழிவறை இல்லாத காரணத்தால் தந்தையின் மீது 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.  #Toilet
    ×