search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து மின் ஊழியர் சாவு
    X

    குற்றாலம் அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து மின் ஊழியர் சாவு

    • ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பட்டன் என்ற ரமேஷ்(வயது 50). இவர் மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    தற்போது தனது மகன் ரிஷி கிருஷ்ணனுடன் தென்காசி அருகே உள்ள குடியிருப்பு சர்ச் தெருவில் வசித்து வந்தார். சமீப காலமாக அகரக்கட்டு பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 31-ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ரமேசுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ரிஷி கிருஷ்ணன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். மறுநாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரமேஷ் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

    அவர் கழிவறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து இறந்துள்ளார் என்பதை அறிந்த அவரது மகன், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×