search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN government"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார் பொருளாதார வல்லுநர், முனைவர் பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது, சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பி உள்ளது. இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை. இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    இதையடுத்து சாந்தன் தாக்கல் செய்த மனுவை பிப்.29-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

    • பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
    • பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை விட பின்தங்கி இருந்த மாநிலங்கள் தற்போது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு கட்டுப்பாடுகள் போடுவதால் மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தமிழகத்தில் தாமதம் ஆகிறது.

    தமிழக அரசால் கோவை விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விமான நிலைய நடவடிக்கையை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்த முடியும்.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையை கொடுத்திருக்கிறார். அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக சமமான நிதி பங்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது

    பாரதிய ஜனதா ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட அதிகமான நிதி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக பார்க்க வேண்டும். பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் என்ற வகையில் அதனை நான் வரவேற்கிறேன்.

    அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக்கூடாது. கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அ.தி.மு.க.வினர் தவிர்க்க வேண்டும்.

    பா.ஜ.க. புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழகத்தில் மாறி வருகிறது. பாஜகவை, மோடியை எதிர்த்தவர்கள் தற்போது பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி நியாய விலைக்கடை மூலம் வழங்கப்பட்டது.

    இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 13.72 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டு, எந்த பொருளும் வாங்க முடியாத கார்டுதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், வெளியூரில் இருந்து இங்கு தங்கி வேலை செய்வோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்கள் விண்ணப்பம் எழுதி கொடுத்திருந்தனர். ரேஷன் கார்டு இல்லாதவர்களும் எழுதி கொடுத்தால் அவர்களது விண்ணப்பமும் நிவாரணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

    அதனை தொடர்ந்து 5.5 லட்சம் பேர் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதில் ரேஷன் கார்டு இணைத்து 2 லட்சத்து ஆயிரம் பேரும், ரேஷன் கார்டு இல்லாமல் 3 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மனு கொடுத்து இருந்தனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வந்தது.

    அது மட்டுமின்றி அந்தந்த வார்டு வருவாய், சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வந்தனர்.

    விண்ணப்பதாரர்களின் வீடுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்ததா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதே போல் ரேஷன் கார்டு இல்லாதவர்களின் விண்ணப்பங்களுடன் ஆதார் மற்றும் முகவரி சான்றுக்கான வாடகை ஒப்பந்தம், கியாஸ் பில், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு வந்தது.

    இதில் தகுதியான நபர்களை கண்டறிந்து கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஆய்வு நடத்திய அதிகாரிகள் தகுதியான விண்ணப்பதாரர்களை வீட்டின் முன்பு போட்டோவும் எடுத்து பதிவு செய்தனர்.

    இந்த பணிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்போது இந்த கள ஆய்வு அனைத்தும் நிறைவடைந்துவிட்டது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை 4 மாவட்ட கலெக்டர்களும் அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பட்டியலில் சுமார் 5 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    எனவே விரைவில் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதித்துறையில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டதும் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
    • முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    சென்னை:

    மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.

    "உங்களை தேடி, உங்கள் ஊரில்" முகாம் இனிமேல் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட கலெக்டர் வரைய வேண்டும் என்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

    முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்கள், மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5-ந்தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    கோவை:

    கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து இன்று கோவையில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும், கோவை மாவட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அ.தி.மு.க பகுதி, பேரூர், வார்டு செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் குவிந்திருந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு வந்தனர்.

    தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பகுதி, வார்டு, பேரூர், செயலாளர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர், சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்குகிறார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

    • “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
    • கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான "நம்மாழ்வார் விருதுடன்" பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசாக ரூ.1.00 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
    • கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

    நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
    • சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.

    தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
    • 2023-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதுக்கு பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' 1995-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கி வருகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    • போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
    • பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறைக்கு 100 மின்சார ஏ.சி. தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் நகர்ப்புறங்களின் போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பஸ்கள் வாங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதை செயல்படுத்தும் விதமாக இப்போது 100 ஏ.சி. மின்சார பஸ்கள் வாங்குவதற்கு அரசு டெண்டர் கோரி உள்ளது. மின்சார பஸ்களுடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளுக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏ.சி. பஸ்கள் வழங்கும் நிறுவனம், சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையத்தையும் அமைத்து தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

    • தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக தெரிகிறது. தனது ராஜினாமா முடிவை முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டார். இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை, கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

    ×