search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎஸ்சி"

    • இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    அரசு துறையில் உயர் பதவிக்கான துணை கலெக்டர், போலீஸ் துணை கண்காணிப்பாளர், வணிக வரிகள் உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீயணைப்பு மாவட்ட அலுவலர் ஆகிய 90 பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 27-ந்தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடக்கிறது. முதல் நிலை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதன்மை தேர்வு நடைபெறும் நாள் வெளியிடப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதிய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவனருள், ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணக்குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார் பொருளாதார வல்லுநர், முனைவர் பிரேம்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிய உறுப்பினர்கள் 6 வருடம் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.

     

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
    • ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

    இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

    இதற்காக விண்ணப்பம் செய்வோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்வுக்கான அனைத்து தகுதிவாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.

    தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விண்ணப்பம் செய்யும் நபர் முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதன்பின் எந்த அனுமதியும் கிடையாது.

    அவர்கள், தமிழக வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

    3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

    பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

    பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும்.

    அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    • போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது.
    • கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.


    பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      சென்னை:

      2011ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

      அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும்.

      விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்திய சென்னை ஐகோர்ட், தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

      • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி தேர்வு நடைபெற்றது.
      • 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தனர்.

      டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி குரூப் 2 முதன்மை தேர்வை நடத்தியது. ஆனால், முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

      இதனால் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

      இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக இன்று குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 10 1/2 மாதங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

      தேர்வு நடத்தப்பட்டபோது 5486 இடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுந்தியிருந்தனர். தற்போது காலிபணியிடங்கள் 6157 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

      2022-ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

      • குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இம்மாதத்துக்குள் வெளியாகிறது.
      • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி தேர்வு நடத்தப்பட்டது.

      சென்னை:

      தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி.யால் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படாமல் இருக்கும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்ற அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

      அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான முடிவு வருகிற 12-ந்தேதி வெளியாகிறது. இந்த பதவிகளில் முதலில் 5 ஆயிரத்து 529 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் அதில் சில இடங்கள் சேர்க்கப்பட்டு, சில இடங்களை தவிர்த்து பட்டியல் வெளியானது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பாணையில் 5 ஆயிரத்து 777 இடங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

      மேலும் குரூப்-1ஏ சேவைகளில் வரும் 9 உதவி வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவும் இம்மாதத்துக்குள் வெளியாகிறது.

      இதேபோல், 95 குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, குரூப்-1சி சேவைகளில் வரும் 11 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு, சுற்றுலா அலுவலருக்கான எழுத்து தேர்வு, மருந்து பரிசோதனை ஆய்வக இளநிலை ஆய்வாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு, கால்நடை தடுப்பு மருத்துவ நிறுவன ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான கணினி வழித்தேர்வு ஆகியவற்றுக்கு அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) முடிவுகள் வெளியிடப்படும்.

      மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவு ஐகோர்ட்டு வழக்கால் நிலுவையில் உள்ளது.

      • டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை.
      • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

      சென்னை:

      பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடைபெறும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருக்கிறது.

      ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

      தென்மாவட்டங்களில் அண்மையில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் எத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டன என்பது அனைவரும் அறிந்தது தான். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதை தேர்வாணையம் கண்டுகொள்ளவில்லை. அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி எழுத்துத் தேர்வுகளை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

      தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

      இந்தக் காரணங்களையும், மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வு களை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

      • குரூப்-4 தேர்வு: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.
      • குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள 65 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது.

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

      அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

      அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான ஆண்டு திட்ட உத்தேச அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டது. அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

      அதன் விவரங்கள் பின்வருமாறு:-

      * குரூப்-4 தேர்வு: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.

      * குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள 65 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு ஜூலை மாதம் நடைபெறுகிறது.

      * குரூப்-2 மற்றும் 2ஏ: நேர்முக மற்றும் நேர்முக அல்லாத தேர்வுகளில் 1,294 பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது. ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறும்.

      * சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் 2 உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடைபெறும்.

      * தமிழ்நாடு சட்டமன்றம் பணிகளில் ஆங்கில நிருபர் பணியிடத்தில் 6 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடக்கிறது.

      * வனத்துறையில் வனகாப்பாளர் மற்றும் வனக்கண்காணிப்பாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1,264 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

      * ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சார்நிலைப்பணிகளில் 467 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான, அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது.

      * ஒருங்கிணைந்த சட்ட சேவைகள் துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வுகள், ஜூலை மாதம் நடக்கும்.

      * ஒருங்கிணைந்த அறிவியல் சேவைகள் தேர்வுகளில் 96 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது. தேர்வு செப்டம்பர் மாதம் நடக்கும்.

      * ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப்பணிகளில் 23 காலியிடங்கள் உள்ளன. இதற்கான, அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும். தேர்வு, செப்டம்பர் மாதம் நடக்கும்.

      * ஒருங்கிணைந்த உடற்கல்வி சேவைகளில் 12 காலிப்பணியிடம் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

      * ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவி சார்நிலைப்பணிகளில் 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

      * தொல்லியல்துறை அதிகாரி மற்றும் உதவி அதிகாரி பணியிடங்களில் 14 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

      * தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும். தேர்வுகள், நவம்பர் மாதம் நடைபெறும்.

      * ஒருங்கிணைந்த கணக்குப்பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகிறது. தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்கிறது.

      * ஒருங்கிணைந்த நூலக பணிகள் தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும்.

      * ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில், 47 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

      டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான அட்டவணையில், குரூப்-4, தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், ஒருங்கிணைந்த கணக்குப்பணிகள், ஒருங்கிணைந்த நூலக பணிகள் ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

      மேலும், அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

      • குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
      • குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிப்பு.

      டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

      5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு

      குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

      மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

      ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

       

      • குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணியிடங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
      • 15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

      சென்னை:

      தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது.

      குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

      இதற்கான ஆண்டு தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வெளியிட்டு வருகிறது.

      இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      15 ஆயிரம் பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் எனக் கூறப்படுகிறது. 30 வகையான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

      • தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
      • பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

      பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

      எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத் துறை அமைப்புகளின் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும். அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.

      அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×