search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உங்களை தேடி உங்கள் ஊரில்"

    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.
    • இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது.

    பொள்ளாச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் கிராமங்களில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆனைமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு பொதுமக்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, ஆனைமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் நலத்திட்ட பணிகள் மற்றும் அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது மக்களையும் சந்தித்தார். அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து அவர் ஆனைமலை பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கங்கள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், தாசில்தார் சிவகுமார் உடனிருந்தனர்.

    இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய கள ஆய்வானது, நாளை காலை 9 மணி வரை நடக்கிறது. இன்று இரவு ஆனைமலை பகுதியில் உள்ள சேத்துமடை கிராமத்தில் தங்கும் அவர் மக்களை நேரடியாக சந்திக்கிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.

    • "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
    • முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    சென்னை:

    மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து கலெக்டர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.

    "உங்களை தேடி, உங்கள் ஊரில்" முகாம் இனிமேல் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட கலெக்டர் வரைய வேண்டும் என்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

    முகாம் நடைபெறும் நாளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள், தாங்கள் செல்லும்போது தாலுக்காவில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட வேண்டும்.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அலுவலர்கள், மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5-ந்தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×