search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati temple"

    • 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.
    • தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் இதுவரை 2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    இனி 5 கிராம், 10 கிராம் எடையில் 4 வகையான மாதிரிகளில் திருமணத்துக்கான தங்க (மாங்கல்யம்) தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின்னர், விற்பனை செய்யப்பட இருக்கும் தங்க தாலிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

    கடந்த காலங்களில் கல்யாண மஸ்து என்ற பெயரில், தேவஸ்தான நிர்வாகம் நடத்திய கூட்டுத் திருமணங்களில் 32,000 தம்பதிகள் மண முடித்தனர்.

    அவர்களுக்கு 2 கிராம் எடை கொண்ட தங்க தாலியை நன்கொடையாக தேவஸ்தானம் நிர்வாகம் வழங்கியது.

    ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்க தாலிகளின் மகிமை காரணமாக, 32 ஆயிரம் தம்பதிகளில் ஒருவரும் மதம் மாறவில்லை என தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர். 33, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    நாளை காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இந்த டிக்கெட்டுகளை வரும் 20-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    இதே போல் வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் 750 பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 23-ந் தேதி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதே போல் அன்று மாலை தங்கும் விடுதி முன்பதிவு தொடங்குகிறது.

    இந்த வசதியினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 73,016 பேர் தரிசனம் செய்தனர். 20,915 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. வார விடுமுறை நாள் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து இருந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் மற்றும் முதியோருடன் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசன வரிசையில் காத்திருந்து சிரமம் அடைந்தனர்.

    மேலும் குளிர் காற்று வீசுவதால் குளிரில் நடுங்கியபடி தரிசனத்திற்கு சென்றனர்.

    திருப்பதியில் நேற்று 76,058 பேர் தரிசனம் செய்தனர். 22, 543 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.
    • வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்று கடித்து கொன்றது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினர் பானு பிரகாஷ் ஆந்திர ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடைபாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நேற்று ஆந்திரா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.

    வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருப்பதி மலை வரை 2 பக்கமும் இரும்பு வேலி மற்றும் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம், வனத்துறை, வனவிலங்கு நிர்வாகம் ஆகியவை இணைந்து மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நிரந்தர தீர்வுக்கு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை 6 வார காலத்திற்குப் பின்பு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • திருப்பதி கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது.
    • 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர்.

    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது. இந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் இடையூறு இன்றி, குறித்த நேரத்திற்குள் சுவாமியை வைகுந்த வாயில் வழியாக தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த 10 நாட்களில் ரூ.40 கோடியே 20 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர். 2.14 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.

    இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

    அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது.
    • கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.

    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது. இது, கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

    மேலும் 2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில்2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு ஆண்டு உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
    • பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    திருப்பதி:

    எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

    விண்வெளியில் உள்ள தூசு, நிறமாலை, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்ய உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.

    இதையடுத்து, பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.

    • இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
    • அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வருகிறது.

    தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரெயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தை எடுத்துவிட்டு புதியதாக ரூ.600 கோடியில் கட்டிடங்கள் கட்டுவது வளர்ச்சி பணிகள் மற்றும் தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
    • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

    இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

    இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    திருப்பதி:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

    முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

    அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ×