search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவா டிக்கெட் நாளை வெளியீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவா டிக்கெட் நாளை வெளியீடு

    • 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.
    • ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    நாளை காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவா, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    இந்த டிக்கெட்டுகளை வரும் 20-ந் தேதி வரை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவ டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    இதே போல் வெள்ளிக்கிழமை தவிர்த்து தினமும் 750 பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 23-ந் தேதி டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

    ரூ. 300 சிறப்பு ஆன்லைன் தரிசன டிக்கெட் 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதே போல் அன்று மாலை தங்கும் விடுதி முன்பதிவு தொடங்குகிறது.

    இந்த வசதியினை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 73,016 பேர் தரிசனம் செய்தனர். 20,915 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×