search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் சிறுத்தை தாக்குதலை தடுக்க நிரந்தர தீர்வு தேவை: ஐகோர்ட் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதியில் சிறுத்தை தாக்குதலை தடுக்க நிரந்தர தீர்வு தேவை: ஐகோர்ட் உத்தரவு

    • தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.
    • வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்று கடித்து கொன்றது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினர் பானு பிரகாஷ் ஆந்திர ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடைபாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நேற்று ஆந்திரா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.

    வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருப்பதி மலை வரை 2 பக்கமும் இரும்பு வேலி மற்றும் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம், வனத்துறை, வனவிலங்கு நிர்வாகம் ஆகியவை இணைந்து மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நிரந்தர தீர்வுக்கு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை 6 வார காலத்திற்குப் பின்பு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×