என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
    X

    திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

    • வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து உள்ளதால் தரிசன நேரம் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 71,664 பேர் தரிசனம் செய்தனர். 33, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×