என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் 10 நாட்களில் 6½ லட்சம் பக்தர்கள் வைகுந்த வாயில் தரிசனம்
- திருப்பதி கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது.
- 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர்.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது. இந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் இடையூறு இன்றி, குறித்த நேரத்திற்குள் சுவாமியை வைகுந்த வாயில் வழியாக தரிசனம் செய்துள்ளனர்.
இந்த 10 நாட்களில் ரூ.40 கோடியே 20 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர். 2.14 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






