search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ticket"

    • யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
    • யு.டி.எஸ். செல்போன் செயலி பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

    சென்னை :

    ரெயில் பயணிகள் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால், பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யு.டி.எஸ். செல்போன் செயலி தெற்கு ரெயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்களது ஸ்மார்ட் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, முன்பதிவில்லாத டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும்.

    இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், முக்கிய ரெயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே, இந்த செயலியை பயன்படுத்தி, முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். யு.டி.எஸ். செல்போன் செயலியிலும் சில ரெயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதை கிராமப்புறங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ். செல்போன் செயலியை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரெயில் நிலையம் ஆகும். இதற்கு முன்பாக கிராமப்புற ரெயில் நிலையங்களில், டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது, யு.டி.எஸ். செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    மேலும், இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.

    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • எப்படி வந்தது என்று பொதுமக்கள் கேள்வி
    • போலியாக அச்சிடப்பட்டவையா என்று அதிர்ச்சி

    ஜெயங்கொண்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பேருந்து கிழித்து வழங்கப்படும் பயண சீட்டு ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. 220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது மர்மமாக உள்ளது போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்துக் கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும் எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள் பேருந்துகளில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது அப்பகுதி மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம்.
    • ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணச் சீட்டு பெறுவதற்காக தற்போது 99 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கூடுதலாக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 96, திருச்சி மண்டலத்தில் 12, மதுரை மண்டலத்தில் 46, சேலம் மண்டலத்தில் 12 மற்றும் எஞ்சிய 88 இயந்திரங்கள் திருவனந்தபுரம் பாலக்காடு மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ளன.

    இந்த இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம். மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கலாம். ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயணச் சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

    தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் இயந்திரத்தில் இடம் பெற்றுள்ளதால் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் ஏடிவிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு கற்பிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
    • இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    75 பேர் கைது

    அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க

    ளிடம் இருந்து ரூ.28 லட்சம்

    மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த

    னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.

    ரூ.1 லட்சம் மதிப்பு

    நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • விருதுநகரில் ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • நகை கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலைக் கரையை சேர்ந்தவர் கருப்ப சாமி (வயது 36). இவருக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டில் சேர்ந்துள்ளார். அந்த நகை கடையின் வரதராஜன், சுப்பிர மணியன், பாலவிக்னேஷ், பவுன்ராஜ் ஆகியோர் நிர்வாக பங்குதாரர்களாக உள்ளனர். கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் பணம் கட்டி வந்துள்ளனர்.

    இதற்கிடையே அதன் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நகை சீட்டு பணம் செலுத்துவதற்காக கருப்பசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.

    கருப்பசாமி அடுத்த மாதம் சென்று பார்த்தபோது, கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்ததும் கடை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. இதே நகை கடையின் உரிமையாளர்கள் மதுரையில் நடத்தி வரும் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இந்த நகை கடையில் கருப்பசாமி 3 கால் லட்சம் செலுத்தியுள்ளார். கருப்ப சாமிக்கு நகைக்கடையை அறிமுகம் செய்தார். வாழவந்தான் ரூ. 40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருவதாகவும், மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் நகை சீட்டு தொகை சேர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. நகைசீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் நகைக்கடை மூடப்பட்டுள்ளது.

    இந்த மோசடி குறித்து கருப்பசாமி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் வரதராஜன் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • பரசு–ராமன் அக்ரஹாரம் பகுதி–யில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சம்பவஇடத்திற்கு சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை பரசுராமன் அக்ரஹாரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேற்கு போலீசாருக்குதகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்ததும் சீட்டு விளையா–டியவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்கள் 5 பேரை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சசிகுமார் (வயது 40), ராஜேந்திரன் (41), பரிசுத்தம் நகரை சேர்ந்த சுப்ரமணியன் (58), விக்னேஷ் (27), ராகவேந்திரன் (40) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையா டியதும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமார், ராகவேந்திரன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    • வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட் கட்டணம் உயர்கிறது
    • ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலில்

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி தரிசன டிக்கெட்கட்டணத்தை இந்து சமய அறநிலை துறை உயர்த்த முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக கோவில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்தாண்டு வைகுந்த ஏகாதசி விழாவின்போது கிளி மண்டபத்திலிருந்து தரிசனம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 500, சந்தன மண்டபத்தில் இருந்து ஊர்வலத்தை தரிசிக்க ரூ.3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    நடப்பு ஆண்டில் சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 500 லிருந்து ரூ.1000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ. 5000 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு பின்னர் இப்போது தரிசன கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்தக் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்தர்களுக்கு நேற்றைய தினம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யாரும் நேரடியாக வந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே திட்டமிட்டபடி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், சலுகை அடிப்ப டையில் வழங்க ளப்படும் டிக்கெட்டை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது இதன் மூலம் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் தற்போதைய சூழலில் இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 300 டிக்கெட்டுகள் சந்தன மண்டபத்தில் இருந்தும்,1000 டிக்கெட்டுகள் கிளி மண்டபத்தில் இருந்தும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    2019-க்கு பின்னர் கோவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

    • மதுரை கோட்டத்தில் பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த நடைமுறை அமலுக்கு வந்தது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் முதல்முறையாக மதுரை கோட்டத்தில் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் டிக்கெட் சோதனை செய்வதற்காக, கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்து உள்ளன. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டுகளை சுலபமாக சோதனை செய்ய இயலும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், அச்சிடப்பட்ட பட்டியலை பார்த்து பயணச்சீட்டுகளை சோதனை செய்வார்கள். தற்போது இந்த பட்டியல் கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை கோட்டத்தில் முதல் கட்டமாக தேஜாஸ், பாண்டியன் ஆகிய விரைவு ரெயில்களில் மேற்கண்ட கருவிகள், பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. தென்னக ரெயில்வே அளவில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். அடுத்தபடியாக காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் ஆகியவற்றை பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு உடனடியாக அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், மேற்கண்ட காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மதுரை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனைக்காக நவீன கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்தது, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவு வாயிலில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரம் வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கும்படி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகள் அவதிப்பட்டதை தவிர்க்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    கொரோனா பரவல் காரணமாக அந்த எந்திரங்கள் முழுமையாக செயல்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுகிறது.

    இதனால் ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பிரதான நுழைவுவாயிலில் 8 கவுண்டராக இருந்து வந்தது. இதில் 3 கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. மேலும், மேற்கு நுழைவுவாயில் முன்பதிவு பயணச்சீட்டும், முன்பதிவில்லாத பயணசீட்டும் ஒரே டிக்கெட் கவுண்டரில் வழங்கப்படுகிறது.

    இதனால் தாமதமும் பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, மேற்கு நுழைவுவாயிலில் கூடுதலாக தானியங்கி டிக்கெட் வழங்கும எந்திரம் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் ரெயில் நிலைய பிரதான நுழைவுவாயிலில் கூடுதலாக 2 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் வைக்க வேண்டும்.

    இதே போன்று பரமக்குடி ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமார் அங்குள்ள பேக்கரி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமான செல்வம் என்பவர் வந்து 3 இலக்க எண்கள் பேனாவில் எழுதப்பட்ட வெள்ளை சீட்டுகளை காட்டி மேற்படி சீட்டுகளை வாங்கினால் உங்களுக்கு பரிசு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லியுள்ளார்.

    அதற்கு சரத்குமார் தன்னிடம் பணமில்லை என்று கூறி வந்துவிட்டார். இதேப்போல் ஏற்கனவே அவர் பலரிடம் லாட்டரி சீட்டில் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

    இதையடுத்து சத்தியமங்கலம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் 13 ஆயிரத்து 750 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
    ஆக்ரா:

    உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது.  முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான  கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.



    இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.

    ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும்.  பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.

    கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
    ×