search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயண சீட்டு"

    • காரைக்கால் - திருச்சி ரெயில் பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
    • திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தாா்.

    செயலா் வக்கீல் ஜீவக்குமாா் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூா் ரெயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூா் ரெயில் நிலைய பின்பகுதி நுழைவு வாயில் அருகேயுள்ள பயணச் சீட்டு வழங்கும் மையத்தை 24 மணிநேரமும் செயல்பட வைத்து, அங்கு முன்பதிவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

    வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் மாலை 5.15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து புறப்படுகிறது.

    அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், பணி முடிந்து மாலையில் வீடு திரும்ப வசதியாகவும், மாணவ, மாணவிகள் செல்ல வசதியாகவும் மாலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும்.

    பயணிகளுக்கு பயன்படும் வகையில் வண்டி எண் 06646 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரெயில் காலை 8 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்படும் விதமாக பயண நேரத்தை மாற்ற வேண்டும்.

    திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.05 மணிக்கு பிறகு 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில்தான் உள்ளது.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினா்கள் கண்ணன், திருமேனி, செல்லகணேஷ், உமா்முக்தாா், பைசல்அமகது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • மதுரை கோட்டத்தில் பயண சீட்டு சோதனை செய்ய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • இந்த நடைமுறை அமலுக்கு வந்தது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் முதல்முறையாக மதுரை கோட்டத்தில் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் டிக்கெட் சோதனை செய்வதற்காக, கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்து உள்ளன. இதன் மூலம் டிக்கெட் பரிசோதகர்கள் முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டுகளை சுலபமாக சோதனை செய்ய இயலும்.

    இதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள், அச்சிடப்பட்ட பட்டியலை பார்த்து பயணச்சீட்டுகளை சோதனை செய்வார்கள். தற்போது இந்த பட்டியல் கணினி மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்காக மதுரை கோட்டத்தில் பயண சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    மதுரை கோட்டத்தில் முதல் கட்டமாக தேஜாஸ், பாண்டியன் ஆகிய விரைவு ரெயில்களில் மேற்கண்ட கருவிகள், பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. தென்னக ரெயில்வே அளவில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் பெண் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பயண சீட்டுகளை எளிதாக சரிபார்க்க முடியும். அடுத்தபடியாக காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் ஆகியவற்றை பயணிகள் முன்பதிவு தரவு நிலையத்திற்கு உடனடியாக அனுப்ப முடியும். இதன் மூலம் வழியில் உள்ள ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், மேற்கண்ட காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மதுரை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனைக்காக நவீன கையடக்க கருவிகள் நடைமுறைக்கு வந்தது, பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×