என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி; 2 பேர் கைது
- விருதுநகரில் ரூ. 1 கோடி நகை சீட்டு மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- நகை கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலைக் கரையை சேர்ந்தவர் கருப்ப சாமி (வயது 36). இவருக்கு அருப்புக்கோட்டையை சேர்ந்த வாழவந்தான் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் மூலமாக விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டில் சேர்ந்துள்ளார். அந்த நகை கடையின் வரதராஜன், சுப்பிர மணியன், பாலவிக்னேஷ், பவுன்ராஜ் ஆகியோர் நிர்வாக பங்குதாரர்களாக உள்ளனர். கருப்பசாமி மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் முதல் பணம் கட்டி வந்துள்ளனர்.
இதற்கிடையே அதன் உரிமையாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன் என்பவர் தற்கொலை செய்து இறந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நகை சீட்டு பணம் செலுத்துவதற்காக கருப்பசாமி கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஆடிட்டிங் நடைபெறுவதாகவும், அடுத்த மாதம் வந்து மொத்தமாக பணம் செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
கருப்பசாமி அடுத்த மாதம் சென்று பார்த்தபோது, கடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்ததும் கடை பல நாட்களாக பூட்டிக்கிடந்தது தெரியவந்தது. இதே நகை கடையின் உரிமையாளர்கள் மதுரையில் நடத்தி வரும் நிதி நிறுவனமும் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த நகை கடையில் கருப்பசாமி 3 கால் லட்சம் செலுத்தியுள்ளார். கருப்ப சாமிக்கு நகைக்கடையை அறிமுகம் செய்தார். வாழவந்தான் ரூ. 40 லட்சம் வரை செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வருவதாகவும், மொத்தமாக ரூ. 1 கோடிக்கும் மேல் நகை சீட்டு தொகை சேர்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது. நகைசீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பித்தராமல் நகைக்கடை மூடப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து கருப்பசாமி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜ், சுப்பிரமணியனின் மனைவி முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர். மேலும் வரதராஜன் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்