search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "testing"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மற்றும் சேளூர் பகுதியில் தனியார் வாகனங்கள் வாடகை ஒப்பந்த வாகனமாக இயக்கப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் நடத்திய சோதனையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 3 கார்கள், வாடகைக்கு இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த 2 இருசக்கர வாகன ஓட்டிகள், செல்போன் பேசிக்கொண்டும், சீட் பெல்ட் அணியாமலும் வந்த கார் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார். 

    • நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள்.
    • இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். அவர்கள் அங்குள்ள இயற்கை அழகை பார்த்து ரசிப்பதுடன் அருவிகளிலும் குளித்து மகிழ்வார்கள்.

    சமீப காலமாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்கள் மலை பாதையின் கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்துவதாக புகார் எழுந்தது. மேலும் காலி மது பாட்டில்களை அவர்கள் வீசி எறியும்போது, அதனை எடுத்து செல்லும் குரங்குகள் மீதம் இருக்கும் மதுவையும் பருகி உடல் உபாதைக்கு ஆளாகி வந்தன.

    இதனையடுத்து கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள

    காரவள்ளி சோதனை சாவடியில், வன காப்பா ளர்கள், ஊழியர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களில் பதுக்கி எடுத்துச் செல்ல முயன்ற மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மதுவை கீழே ஊற்றி அதனை அழித்தனர்.

    கொல்லிமலைக்கு செல்வோரும், இங்கிருந்து

    அடிவாரப் பகுதிக்கு வருவோரும் விலங்குக ளின் நலன் கருதி மது பாட்டில்களை கொண்டு செல்ல வேண்டாம். தடுப்பு சுவரில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சாலையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்த கூடாது. வனத்துறையின் சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பாலை தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையின் நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. திருப்பாலை தனியார் பள்ளியில் மாணவிகளை அழைத்து வர பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் பள்ளி பஸ்சில் நேற்று பழுதாகி நின்று விட்டது.

    பள்ளி நிர்வாகம் கிட்டத்தட்ட 150 மாணவிகளை ஒரே பஸ்சில் அடைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அழகர்கோவில், மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மாணவிகளுக்கு பஸ்சில் இடம் கிடைக்கவில்லை.

    அவர்கள் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தது. கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளி பஸ்சின் வாகன ஓட்டுநர், அதே பகுதியில் உள்ள சந்துக்குள் பஸ்சை 30 நிமிடமாக நிறுத்தி வைத்தார்.

    பள்ளியில் இருந்து களைப்புடன் வீடு திரும்பிய மாணவிகளை, பஸ்சில் அடைத்து வைத்து காக்க வைத்ததால் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா ஆகிய 4 மாணவிகள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறுகையில், பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தது, ஒரே பஸ்சில் அதிக அளவில் மாணவிகளை அழைத்துசென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

    மதுரை தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து தெருவுக்குள் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் அந்த வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதா? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை பாதுகாக்க முடியும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சத்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு வள்ளியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • வள்ளியூரை சுற்றியுள்ள திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

    வள்ளியூர்:

    சத்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு வள்ளியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. மலையடிவாரம் சூட்டுப் பொத்தையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வள்ளியூரை சுற்றியுள்ள திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கண் மருத்துவர்கள் வைதேகி, ரிஷப் தேசய் ஆகியோர் பொதுமக்களை பரிசோதித்தனர். ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் குறித்த போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
    • பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நீடாமங்கலம்:

    ‌ திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதி குட்டி சிவகாசி என்றும் அழைக்கப்படுவதும் உண்டு.

    இதில் அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் எது? என்பது குறித்த ஆய்வு நடத்தும் பணியில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    வலங்கைமானில் உள்ள வெடிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் அரசு நிர்ணயித்த அளவைவிட தனிநபராக வீட்டிலும் குடோ னிலும் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதை பதுக்கி வைத்ததாக வலங்கைமான் பகுதியை சேர்ந்த சுந்தர், ராஜா, ரவிச்சந்திரன், சீனிவாசன், மற்றொரு ரவிச்சந்திரன், அருணகிரிநாதன், பாலகுரு ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் மீதமுள்ள கடைகளில் அனுமதிபெறப்ப ட்டுள்ளதா? என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த அதிரடியான சோதனை நடைபெற்று வருவது, வெடி கடைகள் நடத்தும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்வேறு சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு ரேஷன் அரிசி அரவை செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயி களிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத் தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள்எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகே டுகள் நடைபெ றாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குநர் ஆபாஸ்குமார் மேற்பார்வையில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, காவல் துணைக்க ண்காணிப்பாள ர்கள் மற்றும் இதர காவல் அலுவலர்களுடன் சேர்ந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா என பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டலத்தில் இதுவரை நடந்த தீவிர வாகன சோதனையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29  டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து லாரி ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை செய்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் கருர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இதனைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் தஞ்சாவூர் சரகம், மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், மருங்குளத்தில் உள்ள நவீன அரிசி ஆலையையும், நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், தஞ்சாவூர் உட்கோட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விழுப்புரத்தில் ெரயில் நிலையத்தில்வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 75- வது சுதந்திர தினத்தை வருகிற 15 -e; தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்நிய சக்திகள் ஊடுறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு விமான நிலையம் ெரயில்நி லையம் முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.சந்தேகத்திற்கு இடமாக நபர்கள் சென்றால் அவர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் ெரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ெரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் விழுப்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் விழுப்புரம் மாவட்ட வெடிபொருள் பிரிவு போலீசார் விழுப்புரம் ெரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைபாதை மற்றும் அங்குள்ள அறைகளிலும் சோதனை செய்தனர்.பின்னர் ெரயில்வே நிலையத்திற்கு வரும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிகின்றனர். மேலும் பயணிகள் கொண்டுவரும் பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்கின்றனர்.

    அதன் பின்னர் இன்று காலை சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் ெரயில் விழுப்புரம் வழியாக சென்றது. அப்போது பாதுகாப்பு படை போலீசார் ரயில் முழுவதும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.அதன் பின்னர் மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலிலும் இந்த சோதனை தொடர்ந்தது. மேலும் இந்த தொடர் சோதனை வருகிற திங்கட்கிழமை வரை நீடிக்கும் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். 

    • 2-வது தவணை தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்து றை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-

    பரிசோதனை அதிகரிப்பு

    கடையநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. நாள் ஒன்றுக்கு 100 மாதிரிகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது 1000 மாதிரிகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் செலுத்தி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 90 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டுள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    பாதிப்பை குறைக்க நடவடிக்கை

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடையநல்லூ ரில்மக்களை அதிகம் சந்திக்கும் வணிகர்களிடம் மாதிரிகள் எடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    கொரோனா சோத னையை அதிகப்படுத்தி பரவலை ஓரிரு வாரங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தலமான குற்றாலத்தில் சீசன் இல்லாததால் பயணி களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது கொரோனா விதி முறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து காட்பாடியில் சோதனை நடத்தப்பட்டது.
    வேலூர்:

    தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு பட்டாசுகளை மக்கள் வெடித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    புத்தாடை வாங்குவதற்கு ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதை போல பட்டாசு கடைகளிலும் அலைமோதும். இப்படி வாங்கப்படும் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பட்டாசுகளை ரெயிலில் எடுத்து செல்ல கூடாது என காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில்:-

    இந்திய ரெயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரெயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும்.

    இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

    விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை செயல் விளக்கம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் துபே தலைமையில் வந்த பொறியாளர்கள் குழுவினர் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1800 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1800 வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விவரத்தை தெரிவது குறித்த எந்திரம் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த முதல் நிலை பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு எந்திர பராமரிப்பு அலுவலர் ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளதாகவும் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே செப்டம்பரி சோதனை ஓட்டம் நடைபெறம் என அதிகாரி தெரிவித்தார். #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு ஒரு பாதையும், சென்ட்ரலில் இருந்து பெரியார் சாலை, அணணாநகர், வடபழனி வழியாக பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலான பாதை முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலான பாதை முடிக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பாதையில் செப்டம்பர் 1-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 45 கிலோ மீட்டரில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளோம். வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சிக்னல், எலெக்ட்ரானிக் பணிகள் நடைபெறுகிறது. திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கிறது.

    செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லாப் பணிகளும் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    அணுஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5' ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி–5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று காலை 9.48 மணியளவில் 'அக்னி–5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் 'அக்னி–5' பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. #AgniV #AbdulKalamisland
    ×