search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட பணி முடிந்தது: வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே செப்டம்பரில் சோதனை ஓட்டம்
    X

    மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட பணி முடிந்தது: வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே செப்டம்பரில் சோதனை ஓட்டம்

    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளதாகவும் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே செப்டம்பரி சோதனை ஓட்டம் நடைபெறம் என அதிகாரி தெரிவித்தார். #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விரைவான போக்குவரத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், அண்ணாசாலை வழியாக விமான நிலையத்துக்கு ஒரு பாதையும், சென்ட்ரலில் இருந்து பெரியார் சாலை, அணணாநகர், வடபழனி வழியாக பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலான பாதை முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலான பாதை முடிக்கப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்ட்ரல், ஐகோர்ட்டு, மண்ணடி ஆகிய ரெயில் நிலையங்கள் அமைகின்றன.

    இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பாதையில் செப்டம்பர் 1-ந்தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதல் கட்டமாக நடந்து வரும் மெட்ரோரெயில் பணிகளில் 45 கிலோ மீட்டரில் 35 கிலோ மீட்டர் பணிகளை முடித்துள்ளோம். வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சிக்னல், எலெக்ட்ரானிக் பணிகள் நடைபெறுகிறது. திட்டமிட்டப்படி எல்லாம் நடக்கிறது.

    செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் எல்லாப் பணிகளும் முடிந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    Next Story
    ×